இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எஸ் ரா எழுதிய " எனது இந்தியா" தொகுப்பை முன் வைத்து ....

 எஸ் ராமகிருஷ்ணன் எழுதி ஜூனியர் விகடனில் தொடராய் வந்த " எனது இந்தியா" தொகுப்பை முன்வைத்து... ஒருவர் ஒரு விசயத்தை ஆவணப்படுத்துவது என்பது நடந்த நிகழ்வைப் பதிவதும், அதுசார் சமூக மாற்றங்களையும் இயல்புகளையும் அடுத்த தலைமுறைக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் கருதி தான். ஆனால் உண்மைக்குப் புறம்பான கருத்துகள்,  வரும்போது, உண்மையைத் தேடிப் போகவேண்டிய அத்தியாவசியம் தவிர்க்கமுடியாததாகி விடுகிறது.   இப்படியானத் தருணங்களில் தான் வரலாற்றாசிரியர்களின் தேவையும் தொல்லியல் அறிஞர்களின் முக்கியத்துவமும் புரியவருகிறது.  அந்த வகையில் எஸ் ரா வின் " எனது இந்தியா" ஒரு பானை இந்தியத் தொன்மத்திற்கு ஒரு கைப்பிடி பதமான உண்மை.  "சரித்திரம் என்பது உறைந்துபோன கற்படிவம் இல்லை, அது வாழ்வனுபவங்களின் வழியே நாம் கவனிக்கத்தவறிய உண்மைகளை, மற்ந்துபோன நினைவுகளை, அறியப்படாமல் போன துயரங்களை நினைவூட்டும் அறிவுத்துறை" என்று தான் ஆரம்பிக்கிறார்.  வரலாற்றின் படிக்கட்டுகளில் நிரபராதிகள் காத்திருப்பார்கள் என்றபடிக்குச் சாகும்வரை ஷாஜஹானுக்கு அவர் எதிர்பார்த்த நீதி அவரது மகன் ஔரங்கசீப்பால் வீட்டுச்சிறையில