இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனா தடுப்பூசியும் மேய்தலும்

  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சில உரையாடல்களும் கேள்விகளும் நம்பிக்கைகளும் உலா வருகின்றன. அவற்றில் பதிவர் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து பிரித்து மேய ஆசைப்படுகிறார். மேய்தல் ஒன்று: கொரோனா தடுப்பூசி உண்மையில் வேலை செய்யுமா, இந்தியாவில் தடுப்பூசி ஒரு விற்பனை தந்திரம் தானே. பதில்: கடவுள் இல்லைனு சொல்லல. இருந்தா நல்லாருக்கும்னு தான சொல்றோம் என்ற ரீதியில் தான் பதில் சொல்லமுடியும். கடவுளை நம்பினால் ஆத்திகர். நம்பவில்லை என்றால் நாத்திகர். உங்கள் அறிவு சொல்வதைக் கேளுங்கள் அவ்வளவே. மேய்தல் இரண்டு: தடுப்பூசி ஒரு டோஸ் போட்டுக்கொண்டுவிட்டால் போதும். மாஸ்க் தேவையில்லை. சமூக இடைவெளி தேவையில்லை. கை கழுவ தேவையில்லை அப்படித்தானே. பதில்: தடுப்பூசி முதல் டோஸ் போட்டு அடுத்த டோஸ் (கோவிஷீல்ட்) க்கு 45 நாட்கள் கழித்துத்தான் தடுப்பூசி வேலை செய்து , ஆண்ட்டிபாடிகள் உருவாக வாய்ப்பு இருக்கிறதாம். 28 நாட்கள் என்று சொன்னவர்கள் 45 என்று மாற்றியிருக்கிறார்கள். உருவாகும் வீதத்தின் அடிப்படையில் தான் சொல்கிறார்கள். எப்படிப்பார்த்தாலும் 28 நாட்கள் கழித்துத்தான் ஆண்ட்டிபாடி உருவாகும். அப்படி உருவாகும் நோய் எதிர்ப்புத்த

##don'tjail-EleRivaldo

படம்
ஒருவர் ஒரு குற்றம் புரிகிறார் என்றால் என்ன செய்கிறோம். சிறையில் அடைக்கிறோம். எதற்காகச் சிறையில் அடைக்கிறோம். வரம்பு மீறியதற்காக ஒரு தண்டனை என்று அதைச் செய்கிறோம். சிறைப்படுத்துவது ஒரு தண்டனை என்ற புரிதல் இருக்கும் நாடு தான் நம்முடையது. ஆனால் யார் யாருடைய இடத்தில் வரம்பு மீறுவது என்பதில் அறம் இருக்கிறது தானே. நேற்று 18/3/21 'தி இந்து' இணைய தளத்தில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. அதில் 'ரிவால்டோ' என்று ஒரு யானையைப் பற்றி கூறியிருக்கிறார்கள். கொரோனா இரண்டாம் அலை மற்றும் தேர்தல் எனத் தற்சமயப் பிரச்சினைகளில் மக்கள் மும்மரமாய் இருக்கும்பொழுது நெடுநாள் பிரச்சினைகளைப் பேசுவது கவனத்தில் வராது தான். எத்தனை பேருக்கு 'ரிவால்டோ' பற்றி தெரியும் என்று தெரியாது. 'ரிவால்டோ' ஒன்றும் தெரியாத வெள்ளந்தி யானை. அவன் தும்பிக்கையில் இருக்கும் காயத்தோடு அவ்வப்போது முதுமலை சரணாலயத்தின் காட்டுப்பகுதியிலிருந்து  அருகிலிருக்கும் ஊருக்குள் வந்துபோகுபவன்.  அவனுக்கு 'ரிவால்டோ' என்ற பெயரை அவ்வூர் மக்களே வைத்திருக்கின்றனராம். அவனை யானைகளின் தெப்பக்காடு முகாமிற்கு கு