இடுகைகள்

டிசம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கனம்

ஒவ்வொரு கணமும் கனம் உன் கண் காணா கணங்களில்!

நீயின்றி..2

எந்த ரஸவாதமும் செய்யமுடியாமல் தோற்றுத்தான் போனது நேற்றைய இரவும் நீயில்லாமல்!

டைகர்.

அதிகாலையில் எப்படி எழுவீர்கள்? நீங்களாகவா? இல்லை கடிகார அலாரம் அடித்தா? இல்லை மனைவி அலாரம் அடித்தா? இல்லை அப்பா ? அம்மா? உடன்பிறப்புகள்? தொலைபேசி? ஒரு நாய்க்குட்டி உங்களை எழுப்பியிருக்கிறதா... அந்த உரிமையை நீங்கள் அதற்குக் கொடுத்திருக்கிறீர்களா..... நான் கொடுத்திருக்கிறேன். அதன் பெயர் டைகர். ப்ரவுன் (பழுப்பு ) மற்றும் வெள்ளை கலந்த உடம்பு. முகம் வெளிர் பழுப்பு. பார்த்ததும் கொஞ்சத் தோன்றும் முகம். துடிப்பு. குட்டியாக வந்த பொழுதே அதன் துள்ளலைப் பார்த்து டைகர் என்று பெயர் வைக்கப்பட்டது. காலையில் கதவைத் திறந்ததும் வீட்டிற்குள் வரத் துடிக்கும். எக்கும். அம்மாவின் மூன்றாவது பிள்ளை. என்னைய விட  உங்க அம்மாவுக்கு நாய் தான் முக்கியம் என்று என் அப்பாவின் புலம்பலுக்குக் காரண நாயகன். குட்டியாய் வந்த அடுத்த நாள் காலையில் பால் ஊற்றினோம். குடித்துவிட்டு அம்மாவின் காலுக்குள் புகுந்து புகுந்து ஓடி விளையாடியது. அவ்வளவு தான் அம்மா அடுத்த நாள் ஒரு பிளாஸ்டிக் பந்தை  வாங்கிப்போட்டார்கள். அதை கடித்து கடித்து உருட்டி விளையாட ஆரம்பித்தது. அதனுடன் பந்தைப் பிடுங்குவது ஓட விடுவது இப

பாதம்

உங்கள் மலரிதழ்களை விலக்கிக்கொள்ளுங்கள்! நீங்கள் பரிசளித்திருந்த முட்களின் முகம் தெரியட்டும்! முட்களுக்குப் பழக்கப்படாமல் பாதம் பலமாவதில்லை!

கிருஶ்ணன் மாடு

நெற்றியில் மட்டும் வெள்ளையாக இருக்கும் மாடுகளைப் பார்த்திருக்கிறீர்களா.? யாரோ சிறு வயதில் என்னிடத்தில் மாடுகளுக்கு நெற்றியில் வெள்ளை இருந்தால் அது கிருஶ்ணன் மாடு என்று சொல்லியிருக்கிறார்கள். அந்நியன் படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தின் சிறு வயது பாத்திரத்திற்கு, அதன் பாட்டி கருடபுராணம் பற்றி சொல்லும்பொழுது அச்சிறு பையனுக்கு ஒரு ஜூம் (zoom) வைப்பார்களே அது போல் எனக்கும் மூளைக்குள் ஒளிந்துகொண்டது அந்த கிருஶ்ணன் மாடு. ஆனால் ஒரு உண்மை என்னவென்றால் அந்த மாதிரி நெற்றியில் வெள்ளை பூத்த அதுவும் உடல் முழுக்க கருப்பாகவும் அல்லது பழுப்பாகவும் இருந்து நெற்றியில் சிறிய அளவு வெள்ளை இருக்கும் பசு மாடுகள் அழகு. அதை தடவிக்கொடுக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். மதுரை நகர்ப்புறத்தில் இரவு நேரத்திலோ அல்லது விடியல் காலையிலோ தெருக்களில் செல்லும் பொழுது பசுமாடுகள் ஓரமாய் அமர்ந்திருக்கும். பார்க்கவே சாதுவாய் அமர்ந்திருக்கும் மாடுகளின் கொம்புகளை நான் பிடித்து ஆட்டிவிட்டு நகர்வது உண்டு. அதுவும் அதுபாட்டுக்கு அமர்ந்திருக்கும். எங்கள் தெருக்களில் இது போன்ற பசுக்கள் காலையில் ஊர்வலம் வரும். க
அவசர அவசரமாய் பகிரப்பட்ட முத்தங்களில் முத்தம் மட்டுமே இருந்தது பிரியம் காட்ட கொஞ்சம் மறுவாய்ப்பு கொடு...

கசியாத கண்ணீர்

இக்கவிதையைத் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..... மிகவும் குழப்பமான காலையில் நீ விழித்ததாய் சொல்லியபோதும்..... நானற்றத் தனிமையிலும் நீ என்னுடன் உழன்றதை உளறியபோதும்.... எந்த பிரயத்தனத்தில் நம் கை கோருமென நீ பிரயத்தனப்பட்டபோதும்... உன் உணர்வுகளுக்கு மொழிபெயர்க்கத் தெரியாத என் கசியாத கண்ணீரும் பேசத்தெரியாத மொழியுமாய் இக்கவிதையைத் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.....!

வலி

விரல் வலிக்க மீட்டிக்கொண்டே இரு.... வீணையின் வலி புரியாத வரை...

நீயின்றி..

இதுவரை எழுதப்படாத ஒன்றை நாள் முழுக்க எழுதி காற்றுக்குக் காவு கொடுக்கப்பட்டக் காகிதம் போலானது நீயில்லாத இன்று....!

உதாசீனம்

நான் எழுதிக்கொண்டிருக்கும் வலி யின் கவிதையில் உதாசீனம் உதாசீனப்படவில்லை....

சாத்தியப்படாத இரவு

அது சாத்தியப்படாத இரவாயிருக்கட்டும்... எல்லாக் கவிதைகளுக்கும் சந்திப்பிழைகளைச் சொல்லிக்கொடுத்த ஒரு கவிதையின் இரவலைத் தராத- அது சாத்தியப்படாத இரவாயிருக்கட்டும்... தோளில் சாய்ந்துகொண்டு விண்மீன்களை எண்ணிக்கொள்ளும் ஒரு நிலாவைத் தவறவிட்ட- அது சாத்தியப்படாத இரவாயிருக்கட்டும்.... கை விரல்களின் கோர்வைக்குள் இரவின் குளிரை வெம்மையூட்டிய தீயின் தாகம் தகர்த்த- அது சாத்தியப்படாத இரவாயிருக்கட்டும்.... நீ வந்துபோகும் சந்தோசக்குமிழிகளை உடைத்துப்பார்க்கும்- அது சாத்தியப்படாத இரவாவேயிருக்கட்டும்....

அவ்வளவு அழகானதல்ல

அவ்வளவு அழகானதல்ல இந்நெடும் பயணம்... பூங்கொத்துகளுக்கிடையே தடித்த முள் கொண்டு கை குலுக்கும் கணங்களைச் சுமந்து செல்லுதல்.... உதட்டுச்சாயம் மட்டுமே தெரியும் வெற்றுச் சிரிப்புகளுக்குப் புன்முறுவல் தரும் சிரிப்புக் கணங்களைச் சுமத்தல்... தோள் சாயும் பசுவின் வேடம் கலைக்கும் புலிகளுக்கு மன்னிப்புத் தீனிகளைச் சுமக்கும்..... இந்நெடும் பயணம் அவ்வளவு அழகானதல்ல.....
கவிதை எழுதி வாசிக்கச்சொல்கிறாய்.. பிழை படும்படியாய் வாசிக்கக் காது திருகுகிறாய்... பிழைகள் அன்னோன்யமாகின்றன..!

2014

2013 எப்படி இருந்தது என்று நிறைய நண்பர்கள் போஸ்ட் செய்கிறார்கள். பொதுவாக வியாபாரத்துறையினருக்கு நிதியாண்டு தான் முக்கியமாய் இருக்கும். எனக்கும். ஏனென்றால் இரண்டு காரணங்கள். முதலாவதாக அலுவலக ரீதியாக புது ஆண்டு ஆரம்பம் என்பதால், இரண்டாவதாக இன்கிரீமெண்ட் என் ஊதியம் அதிகரிப்பது. பொத்தம்பொதுவாகப் பார்த்தால் ஊதிய விகிதம் மற்றும் பொருளாதார விகிதாச்சார அடிப்படையில் முந்தைய வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் நல்ல முன்னேற்றம் போல் தெரிந்தது. ஆனால் பெட்ரோல், காய்கறி மற்றும் ஆடை என இன்ன பிற செல்வுகளும் ஊதிய விகிதத்தைக் காட்டிலும் அதிகமாகி ஒரு சமத்துவத்தை கட்டி விட்டன. ஆதலாலேயே Q.O.L என்றழைக்க்ப்படுகிற வாழ்க்கைத்தரம் உயரவில்லை. ஊதிய உயர்வு மட்டுமே நமது பொருளாதார முன்னேற்றமாய் கருதப்படாது. வருடத்தின் அல்லது ஒரு மாதத்தின் வரவு செலவு பேலண்ஸ் சீட் செய்து பார்த்தோம் என்றால் வரும் விடை சிவப்பு விளக்கில் இருக்குமா இல்லை பச்சை விளக்கில் இருக்குமா என்பதே பொருளாதார நிலை. சென்ற வருடத்தைப் பற்றி பேச ஆரம்பித்ததும் முதன் முதலாகவே பொருளாதாரத்தைப் பற்றி எழுதுகிறான். பணம் மட்டும் வாழ்க்கை இல்லை.