கசியாத கண்ணீர்

இக்கவிதையைத் தான்
எழுதிக்கொண்டிருக்கிறேன்.....

மிகவும் குழப்பமான
காலையில் நீ விழித்ததாய்
சொல்லியபோதும்.....

நானற்றத் தனிமையிலும்
நீ
என்னுடன் உழன்றதை
உளறியபோதும்....

எந்த பிரயத்தனத்தில்
நம் கை கோருமென
நீ பிரயத்தனப்பட்டபோதும்...

உன் உணர்வுகளுக்கு
மொழிபெயர்க்கத் தெரியாத
என் கசியாத கண்ணீரும்
பேசத்தெரியாத மொழியுமாய்

இக்கவிதையைத் தான்
எழுதிக்கொண்டிருக்கிறேன்.....!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....