இடுகைகள்

டிசம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மருந்து விற்பனை பிரதிநிதியாகிய நான்...

சில நாட்களுக்கு முன் ஒரு மருத்துவர் வீட்டில் துப்பாக்கிமுனையில் ஒரு கொள்ளை சம்பவம் நடக்கிறது. விசாரித்த சில நாட்களில் அச்சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளைக்காரர்கள் பிடிபடுகிறார்கள். துப்பாக்கி சப்ளை செய்த சஸ்பெண்ட் ஆன ஒரு காவல்துறை அதிகாரி கவர்னர் பாதுகாப்புப் பணியில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரி என வட்டம் வருகிறது. கொள்ளைக்காரர்களுக்கு அந்த மருத்துவரிடம் பணம் இருக்கும் என்றும் அவர் வீட்டையும் காண்பித்துக்கொடுத்தவர் ஒரு மருந்துவிற்பனைபிரதிநிதி. இப்படித்தான் செய்தி வெளிவந்துள்ளது. பொதுவாகவே மருந்துவிற்பனைபிரதிநிதி களைப் பார்த்தாலே மக்களுக்கு ஏகப்பட்ட அவல உணர்ச்சிகள் உண்டு. மருத்துவர்களுக்கு டீல் போடும் சூத்திரதாரர்கள் நோயாளிகள் காத்திருக்க அவர்கள் உள்ளே சென்று வெகுநேரம் வெட்டி பேச்சு பேசுபவர்கள். வெயிலிலும் மழையிலும் நாயாய் அலைபவர்களென ஓர் அவல உணர்வோடு இங்கு பார்ப்பவர்கள் உண்டு. இது மிகைப்படுத்தப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் அது உங்கள் பெருந்தன்மை. உண்மையில் இந்த மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் என்பவர்கள் யார். அயல்நாட்டு பிரதிநி

கொதிநிலை

ஒரு சிறிய பாத்திரத்தில் கொதிக்க வைத்தப் பாலை ஊற்றிப் பிறகு பிரத்யேகமான டீத்தூளை அதில் தூவி தேவைக்கேற்ப சீனி சேர்த்து நல்ல கொதிநிலைக்குக் கொதிக்க வைத்து சிறிதளவு புதினா வெட்டிவேர் வகைகளை மேலே தூவி சில நொடிகளில் அதை இறக்கி வடித்து டீ க்ளாஸில் ஊற்றி பாய் கடையின் மாஸ்டர் நீட்டினால் காத்திருக்கும் கைகள் எனக்கு எனக்கு என நீண்டு எடுக்கும். அப்படி அந்தக் கடை பிரசித்தம். உண்மையில் அந்தக் கடை பிரசித்தமா இல்லை அந்தக் கடையின் டீ பிரசித்தமா எனக் கேட்டால் அந்தக் கடையின் டீ தான் பிரசித்தம். பாய் கடை டீ என்றால் தனி கிக்குத்தான் என்று சொல்லிக்கொண்டே வந்து டீ பருகுவார்கள். அன்று அவனுக்குக் கூட அந்தப் பகுதியில் தான் வேலை. அந்தப் பகுதியில் அவன் வேலைக்கு வந்துவிட்டால் பாய் கடையில் டீ அருந்திவிட்டுத்தான் செல்வான். ஒரு விற்பனையாளனுக்கு டீ சாப்பிடுவது என்பது ஒரு பழக்கம் அல்ல. சமயத்தில் அதுவும் ஒரு வேலை போலத்தான். எதற்காக டீ சாப்பிடுகிறோம் என்று தனித்து உணராதபடிக்குக் கூட அவன் டீ சாப்பிட்டு இருக்கிறான்.  வேலை சரியாக நடக்கவில்லை என்றால் , களைப்பாக உணர்ந்தால், போகும் வழியில் பிடித்த நண்பர்களைப் பார்த்தா