இடுகைகள்

மே, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொழுப்பு

மாரடைப்பு ஒரு மரணத்தை விழுங்கியிருக்கிறது. மாரடைப்பு என்பது என்ன... அதிலிருந்து தப்பிக்க வழி என்ன... இதெல்லாம் உங்களுக்கும் தெரிந்திருக்கும். தெரியாமலிருந்தாலும் இனிமேலாவது மருத்துவரைச் சந்தித்துத் தெரிந்துகொள்ளுங்கள். இருந்தாலு சில எளிய முறைகள் உள்ளன. உங்கள் உயரம் என்ன... உங்கள் எடை என்ன... உயரத்திற்கேற்ற எடை இருக்கிறதா.... உதாரணத்திற்கு உங்கள் உயரம் 165 செமீ. என வைத்துக்கொள்வோம். உங்கள் எடை 65கிலோவில்ருந்து 68 இருக்கலாம். இது தான் மிகச்சரியான ஆரோக்கியமான சமநிலை. இல்ல....அவ்வளவு மெலிஞ்சுட்டா..நல்லாருக்காது...பாக்குறவங்க நம்மள பாத்து " என்னப்பா இப்படி மெலிஞ்சுட்ட னு சொல்றது கஷ்டமாருக்கு" இப்படிலாம் பேசுனீங்கனா...நீங்க நெஞ்ச பிடிச்சு உட்காருறப்ப எவனும் கூட வரமாட்டான். (இது என் பஞ்ச்) இப்பொழுது 30 வயதுகாரர்களுக்குக் கூட சர்க்கரை வியாதி, மாரடைப்பு வருகிறது. முதலில் உடல்நிலையைப் பொறுத்தவரை நாம் எப்படி யிருக்கிறோம் என்பதை முதலில் நாம் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும். உடல் எடை உயரத்திற்கேற்றவாறில்லாம் கூடுதலாக இருந்தால் லிபிட் டெஸ்ட் எடுத்துப் பார்க்கவேண்டும். அதாவது கொழுப்பு. உடல்

பேராசிரிய. கு. ஞானசம்பந்தன் உரையிலிருந்து எழுதப்பட்டது.

உறவுகளில் உயர்ந்த உறவு அம்மா! அம்மா என்ற வார்த்தைக்கு இணையான வார்த்தை இல்லை. அம்மா என்ற வார்த்தையில் உடல், உயிர் என எல்லாம் அடங்கும். எடுத்துக்காட்டாக " அம்மா"  என்ற வார்த்தையில்   'அ'  என்பது உயிர் எழுத்து 'ம்'   என்பது மெய் எழுத்து 'மா' என்பது  'ம்+ஆ'  உயிரும் மெய்யும் சேர்ந்த உயிர்மெய் எழுத்து. அம்மா என்பவள் நமக்கு உயிரைத் தருவதால் உயிரெழுத்து. நம் மெய்யாய் இருப்பதால் மெய் எழுத்து. இவ்வாறு உயிரும் உடம்புமாய் பாலூட்டி வளர்ப்பதால் உயிர்மெய் எழுத்து. உலகத்தை வெறுக்கும்  துறவிகள் கூட அம்மா மீது பாசம் கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக பட்டினத்தார் மற்றும் ஆதிசங்கரரையும் சொல்லலாம். ஆதிசங்கரர் ஆன்மீகப் பாதையில் ஒரு துறவியாக எங்கெங்குச் சென்றாலும், அம்மா மரணமடைந்ததும் தான் பிறந்த ஊரான 'காலடி' க்கு வந்தார். அதே போல் பட்டினத்தாரும் அவருடைய தாய் இறந்ததைக் கேள்விபட்டதும், தன் சொந்த ஊருக்கு விரைகிறார். அங்கு அவருடைய அம்மாவை விறகுகளை அடுக்கி எரிக்கச் செய்கிறார்கள். ஆனால் பட்டினத்தாரோ - 'என் அம்மாவின் உடம்பு மிகவும்