இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"வியலும்....ஸ்டார்ட் ம்யூசிக்"

அப்பொழுது நான் முதுகலை முதலாண்டு படித்துக்கொண்டிருந்தேன். வேதியியல் துறை. வேதியியல் துறை என்னையும் ஒரு வேதிப் பொருளாக மாற்றிக்கொண்டிருந்தது. அப்போது யாராவது கவிதை எழுதுகிறார்கள் என்றால் ஆர்வமாகப் படிப்பேன். நமக்குக் கவிதை அவ்வளவாக வராது. (அவ்வளவாக என்பது அபாண்டம்....சுத்தமாக வராது) ஆனலும் முயற்சி செய்வேன். வார்த்தைகளை மாற்றி மாற்றிப் போட்டு ஒன்றுக்குக் கீழாய் ஒன்று எழுதி கவிதை எனப் பிரகடனம் செய்துவிடுவேன்.(இப்ப வரைக்கும் அப்படித்தான்)... அச்சமயங்களில்....என் வீடு...சொல்லியே ஆகனும்... என் தந்தை- ஜாலியான அப்பா....கண்டிப்பான தமிழ் ஆசிரியர். என் தாய்- கண்டிப்பான அம்மா...கண்டிப்பான ஆசிரியை. டிஸிப்லின் னு வந்துட்டா....அதாங்க ஒழுக்கம்...னு வந்துட்டா...மிலிட்டரி ஆபிஸர்ஸ் மாதிரிதான்.... என் அண்ணன்- ஒரு வினையூக்கி (கெமிஸ்ட்டரி படிச்சவங்களுக்குத் தெரியும்.....வினையூக்கி வினையில் ஈடுபடாது....ஆனால் வினையை வேகப்படுத்தும்) போல் தான்... படிப்பு ஒழுக்கம் தவிர வீடு ஜாலி எல்லாரையும் சொல்லிட்டேன்...அப்புறம் நான்...நம்ம செயல்பாடு பாருங்க தெரியும்..... வீட்ல லேண்ட்லைன் ஃபோன் இருக்கும்... ஆனால் ரொம்ப நே

உயர்திணை

அது ஒரு மரத்தடி. ஒரு கடையின் முகப்பு. ஒரு நண்பனின் வருகைக்காகக் காத்திருந்த் நேரம். அவன் இடப்பக்கமாய் வருவானா...வலப்பக்கமாய் வருவானா என விழித்திருந்தத் தருணம். அப்பொழுது என் காலில் ஏதோ ஊர்ந்த உணர்வு. கீழே பார்த்தேன். நகர்ந்து பார்த்தேன். மீண்டும் காலை யாரோ தொட்டதுபோல் உணர்வு. ஓர் ஆடு படுத்திருந்தது நான்கு கால்களையும் நீட்டி...... ஒருவேளை இந்த ஆடாக இருக்குமோ?????? சில நேரங்களில் நாம் அஃறிணைகளை மதிப்பதே இல்லை. மறுபடியும் நண்பனைத் தேட ஆரம்பித்தேன்.ஆனால் மீண்டும் அதே உணர்வு. காலை யாரோ தொட்டுவிட்டு எடுத்து விடுகிறார்கள். இம்முறை முகத்தைத் திருப்பி கண்களைக் காலில் வைத்தேன். அந்த ஆடு தான்..... தன் முன்னங்கால்களை என் கால் விரல்களோடு ஒட்டி வைத்தது. சட்டென்று ஆட்டினைப் பார்த்தேன். நாம் சிறு குழந்தைகளைத் தலையில் தட்டி விளையாடி அவர்கள் பார்க்கும்போது சிரிப்போம் அல்லவா....அவ்வாறு ஆடு என்னைப் பார்த்தது. "என்ன" என்று கேட்பது போல் ஆட்டினைப் பார்த்தேன். அதுவும் பதிலுக்கு "என்ன" என்று கேட்பது போல் என்னைப் பார்த்தது. அது கருப்பு-வெள்ளை உடம்பு. முகம் முழுக்க

முத்தம்

உன்னை விட்டுச்செல்லும் ஒவ்வொரு கணத்திலும் உன் இதழ் பறித்துச் செல்லத்தான் ஆசை அதனால் தான் என்னவோ என் முத்தங்கள் உனக்கு இனிக்கின்றன......

மிஸ்டர்..எக்ஸ்

மதுரை புத்தக கண்காட்சி இதற்கு சில முறைகள் சென்றிருக்கிறேன். ஒரு முறை மதுரை முகநூல் நண்பர்களைப் பார்க்க. ஒரு முறை அலுவலக ஊழியர்களுடன்.... இப்படி போனவன் ஒரு முறை ஒரு நண்பனுடன் சென்றிருந்தேன்...அது யார் என்பது சஸ்பென்சாக வைத்துக்கொள்ளலாம். கடைசியாகக் குறிப்பிடுகின்றேன். அதுவரை அவருக்கு ஒரு பெயர் வைத்து இந்தக் கட்டுரையைத் தொடரலாம். என்ன பெயர் வைக்கலாம்....ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்....(யோசிக்கிறேன்)ம்.ம்.ம்.ம்.ம் மிஸ்டர்.எக்ஸ் அதென்ன எக்ஸ் னு கேக்குறீங்களா..... கொய்யாலே...நானும் பத்தாம் வகுப்புல இருந்து பாக்குறேன்....தமிழ் மீடியம் னு கூட பாக்காம....கணக்குப் பாடமா இருக்கட்டும், குவாண்டம் இயற்பியல் இல்லாட்டி வேதியியல் பாடமா இருக்கட்டும்...கண்டுபிடிக்கப்போறத எக்ஸ் னு வச்சுக்கோனு சொல்றானுக...ஏன்  தமிழ் மீடிய பசங்களுக்காகவாவது இந்த எக்ஸ் க்கு பதிலா ஒரு  "அ" னா இல்லாட்டி " ஆ" வனா....ஒரு  "ஐ"னா னு சொல்லலாம்ல....இந்த தமிழினத்தலைவர்கள்லுலாம் இதுக்கெல்லாம் போராட்டம் நடத்தமாட்டாங்களோ... விடுங்க நம்ம கதைக்கு வருவோம்.....ஸோ..நம்ம நண்பன் பெயர்....."மிஸ்டர். எக்

சந்திப்பிழை

உன் என் காதல் காலத்தின் சந்திப்பிழை.....

தேனீர் கோப்பை 5

படம்
காதலோடு தேனீரும் முழுங்க்ப்படுகிறது பார்வைகளால் நான் விழுங்கப்படுவதால்.....

தேனீர் கோப்பை 4

படம்
ஒரு பட்டாம்பூச்சியின் பூப்பருகுதல் பார்த்தல் அரிது.... வா.... தேனீர் பருகலாம்.....

தேனீர் கோப்பை 3

படம்
நீ குடித்துவைத்த தேனீர்கோப்பையில் கொட்டிக்கிடக்கின்றன எனக்கான ஆசைகள் - உன்னைப் பருக....

தேனீர் கோப்பை 2

படம்
அந்நியர்கள் பிரவேசிக்கக் கூடாது சொல்லிவிடு.... உன் என் இடையே தேனீர்கோப்பை......                        

தேனீர் கோப்பை 1

படம்
உன் என் மௌனத்தினூடே என்ன பேசுகிறது தேனீர் கோப்பையின் ஆவி!   

பற்றுக....

படம்
அற்றது பற்றெனில் உற்றது வீடாம்..... உற்றது நீயாயிருப்பின் அற்றற்றது பற்று......

நீ - நான் 11

படம்
என்னை நிறைவேற்றியப் பின் இன்னும் என்ன பார்க்கிறாய்... நான் - நீயா என்றா?.....                                                                        

காதல் கவிதை 07

படம்
இது பட்டம் கூட பறக்காத வானம் பறவை பறக்கிறது... கண்களைக் கொடு... இது விரல்களுக்குள் வியர்த்துவிட்ட தருணம்.. கைக்குட்டை வேண்டாம் கைகள் கொடு..... எழுதப்படாத எழுத்துகள் எழுதும் நேரம்... எழுத்தாணி வேண்டாம் எழுத விடு.....                                                                        

சிணுங்கல்......

படம்
சில்லிட்டுச் செல்கிறது உன் மூச்சுக்காற்று... இதைச் சொன்னால் ச்ச்ச்ச்சீ...எனச் சிணுங்குகிறாய் செல்லிடைப்பேசியில்........                                                                        

தூரிகை

படம்
அழகை வரைந்துவிட்டு அழகற்றதாய் கிடக்கும் ஒரு கைப்பிடி கவிதை- தூரிகை                                                                        

நீ இதுவா இல்லை அதுவா.....

படம்
நீ கலைந்து போகா மேகமா இல்லை தூரல்களின் கோர்வையா.... நீ வரையப் படா கிறுக்கல்களா இல்லை தூரிகை தோற்ற ஓவியமா..... நீ வளைந்து நெளிந்த வானவில்லா இல்லை வானவில்லில் வழுக்கி விழுந்த மழையா.......                                                                        

சலாபம்

படம்
கனவுகளிலா இரவுகள் ஒவ்வொரு கணமும் நீயாக.... வெள்ளைத்தாளின் மூலை முடுக்கெல்லாம் விரல் தழுவிய எழுத்துகள் போல் நானும் உனதனில்..... என் தொண்டைக்குழி வார்த்தைகளை உன் பார்வை மொழி அசை போட..... என் செவிப்பறையில் வீழ்ந்த மௌனத்தை உன் சுவாசம் சுவாசிக்க.... பரிசம் பிரசவித்த வெப்பத்தில் நானும் கரைகின்றேன்.... தொலைந்ததைத் தேடி விட்டு இருப்பதையும் தொலைக்கிறோம் தேடிக்கொள்ள...... இருளும் நீள்கிறது விடியல் வந்தாலும்.......

காதல் தீ

விரல் பற்றுகையில் தீ பற்றுகிறது.... எரிகிறதா... எரிக்கிறதா..... உண்மை! உன்னில் நுழைந்து செல்கிறேன்... இல்லை நீயாய் அழைத்துச் செல்கிறாய்                                                                        

காதல்கவிதை 5

படம்
ஒரு குவளைத் தண்ணீரை நீ பருக.... சில தண்ணீர்த் திவலைகள் உன் இதழ் பருகி தெறிக்கின்றன.......

காதல் கவிதை 4

படம்
என் காலங்களைக் களவாடிவிட்டாய்.... கடிகாரம் சவப்பெட்டியாய் சுற்றுகிறது.....

காதல் கவிதை 3

படம்
குறுக்கலையும் நெட்டலையும் கொஞ்சம் தோற்றுத்தான் போயின.... நீ குறுக்கிட்டுச்சென்ற ஒரு நொடியில்...... வானவில்லும் வளைந்து நெளிகிறது..... அதில் இல்லாத நிறமாய் நீ தெரிவதனால்...... நீ மழையில் நனைவதால் மழையும் கொஞ்சம் நனைகிறது.....

காதல் கவிதை 2

படம்
நான் பார்த்த பட்டாம்பூச்சி உன்னைத் தொட்டதிலிருந்து வண்ணத்துபூச்சியாய்த் தெரிகிறது....                    

இரவல்

கவிதைகளைப் படித்திருக்கிறேன்... தழுவியதில்லை... உன் விரல்களைக் கொஞ்சம் இரவல் கொடு....

தூரம்

படம்
என் தூரம் உன்னருகே வந்தபோது உன் தூரம் என்னைத் துரத்தியது.... தூரங்களைத் துறந்து வா..... நம்மை நாம் துறப்போம்.....

புல்லாங்குழல்

படம்
வேரறுத்து உயிர் பறித்து துளைத் துளையாய் சல்லடையிட்டு புல்லாங்குழல் இசைக்கிறது- உண்மையில் ஒரு மூங்கில் அழுகிறது
கழிந்து விட்ட நாட்களில் வாழ்ந்ததற்கான தடயம்... கொண்டாடிய நாட்களில் கொண்டாடப்பட்ட தருணம்..... தடுத்தாலும் தடுதல் ஆனாலும் ஓடிவிட்ட மாயை- வாழ்க்கை..... முட்டிக்கொள்வதற்கும் முடிந்து கொள்வதற்கும் எவனவனோ முன்னேறுகிறான்.... விரலோடு விரலாகப் பற்றிக் கொள்ள வெறுமை மட்டுமல்ல என் தனிமையும் உண்டு.... என்னிடம் நானே இருக்கின்றேன்... ஒவ்வொரு விடியலையும் தேடிக்கொள்ள.......                                                                        

அருகருகே

அருகருகே உன் வீடும் என் வீடும்..... எட்டும் தூரத்தையே எட்டி எட்டிப் பார்த்தேன் உன்னை நான் எட்டுவதற்காக.... நீ சோறு ஊட்டுவதற்காக உன் வீட்டு மாடியில் காகங்கள் பல.... உண்மையில் உனக்காக கரைவது நான் மட்டும் தான்..... நிலவொளியில் நீ நடப்பதைப் பார்ப்பது சுகமே... வானில் நிலா காய்கிறதா... எனக்காக காய்க்கிறதா.....

திரி

திரியில் ஏற்றப்பட்ட தீபமாய் தள்ளாடுகிறேன்..... காற்றாய் அணைத்து விடு நான் எரிந்தது போதும்.....

நீ - நான் 10

நீ நான் பயணித்த காரைக்குடிச் சாலை கற்களால் ஆனதல்ல..... கனவுகளால்......           

தோல்வி

கடைசி வரை காதல் சொல்லப்படவே இல்லை..... நான் தோற்றேனா... தோற்கடிக்கப்பட்டேனா.....                                                                        

வானம்

படம்
வானம் எழுத்தாய் மாறாத என் எழுத்துகளின் ஏடு.... நானும் அவளும் கை கோர்த்துக் கொண்ட கனவுப் பூங்கா.....வானம் ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் புணரும் முன் களவு கொண்ட வேதி ஊடகம்- வானம்...... நாங்கள் அன்னாந்துப் பார்க்கும் அதிசயம்-வானம்...... மனிதன் செயற்கையாய் விட்டுவைத்த இயற்கை-வானம்....

எதார்த்தம்2

படம்
நீ நீயாகவே இருந்து விடு... உரிமை கோர யாரும் இல்லை.... உன்னையே நீ மீட்டு விடு.... உரிமையாய் வர யாரும் இல்லை..... நீயாய் உதறும் வரை எதுவுமே உன்னோடு தான்.....

நான் - நீ 5

படம்
நீ குடை விரிப்பது நான் நனையாமல் இருக்கவா... இல்லை உன் மழையில் நனையவா......

கவிதைக் குழந்தை....

படம்
இது அதீத கற்பனை..... அசரீரி ஒன்று அழைக்கின்றது..... மாயக்குதிரையின் வேகத்தில் மனக்குதிரையும்...... கற்பனைக் கானலில் மில்டன் கூட பார்க்கிறான்.... பாரதி பார்த்து கற்பனை யானையும் வீழ்கிறது...... வெள்ளைக் காகிதம் எடுத்து எழுதுகோல் விரலோடு நான் பிறக்கிறேன்..... தூண்டில் போட்ட தூக்குத்தண்டனையில் மீனும் பிழைக்கிறது..... என் வரி வாழவில்லை.... வாழையே வாழை வாழையாய் வர தமிழ் என்ன தரிசு நிலமா..... கருக்கலைந்த அகப்பை கண்ணீர் விடுவதில்லை கண்கள் மட்டுந்தான்.... உந்தித் தள்ளப்பட அண்டமாய் கருத்தரிக்கும் என் கவிதைக் குழந்தை....

பௌதீகம்

எதைஎதையோ சொல்லிக்கொடுத்த பௌதீகம் எனக்கும் உனக்குமான ஈர்ப்புவிசையை சொல்லவில்லை நீ நான் நியுட்டன் ஒன்றாயிருந்தால் நான் தான் பிரபலமாயிருப்பேன் ஆப்பிளைக் காட்டிலும்..... உன்னில் விழுந்ததால்.....

நீ சிற்பம்

கள்ளம் என்பதன் அர்த்தம் என்ன கபடம் என்பதன் பொருள் என்ன நீ வாழ வந்ததன் இலட்சியம் என்ன படபடக்கும் பட்டாம்பூச்சியின் வண்ணம் பாராதீர் பிறவியின் வலி பாரீர்...... உளி பார்க்காத எந்தக் கல்லும் கடைசிவரை கல் தான் நீ நீயாகவே செதுங்கிக்கொள்

காதல் கவிதை

ஒரு கவிதை கேட்கிறாய் உன்னையே பற்றிக் கொண்டு திரிபவன் உன்னைப் பற்றி எழுதுகிறேன்.... உன் வளையல் கரங்களில் என் வானம் வளைந்து நெளிகிறது. ரோஜா இதழும் வெட்கப்பட்டே சிவக்கிறது... நான் உனக்கு அதைப் பரிசளித்ததும்... மழை நேரத்து மாலை வேளையில் கருப்பு வானவில்லாய் நீ.... ஓடுகின்ற மின்னலை கண்களால் சிறையெடுக்க உன்னைத் தொடர்கின்றேன் நானும்.... பார்வைகளால் எத்தனை முத்தங்களைப் பரிசளித்தாய்... இத் தருணங்களை கொஞ்சம் விதைத்து விட்டுப் போ... நாணம் கொஞ்சம் நாணட்டும்... என் கனவுகளுக்கு வண்ணம் தீட்டினாய்... இன்னும் என்ன திட்டம் தீட்டுகிறாய்.. கண்களைப் பறித்துக்கொள்ளவா....

நான் - நீ 09

என்னால் வளைத்துப் போடமுடியாத கார்மேகம் நீ.... கொஞ்சம் சிரித்து விடு... நான் கொஞ்சம் நனைந்து கொள்கிறேன்....

வேண்டுதல்..

இம்மை மறுமை இன்னல் தீர இறைவா... என்னை ஈர்த்து விடு....... எம்மை யாமே உமக்களித்தோம்.. வேண்டுவன யாவும் தந்து விடு..... முரண்பட்டவன் பார்த்தால் இல்லை என்பான்.. இல்லை என்பவனுக்கும் ஆம் என்று ஆட்கொண்டு விடு........

உரி(ய)ச் சொல் நீ

சால உறு தவ நனி உரிச்சொற்களாம்... எனக்குரிய சொல் 'நீ' மட்டுமே.....

பாமரன் வாக்கு 2

படம்
ஜாதி பெயர் கேட்பவனை சுட்டுவிட வேண்டும் முதல் குறி அரசியல்வாதி.... அண்ணன் ஒத்துழைக்கமாட்டான் அவன் மாவட்டசெயலாளர்.... இனமெனச் சாடுபவனைச் சாகும்வரை தூக்கிலிட வேண்டும் தம்பியும் ஒத்துழைக்கமாட்டான் அவன் தனிஈழ ஏமாற்று அரசியலின் அடிபொடி..... பள்ளிக்கூடம் கூட சாதிச் சான்றிதழ் கேட்கிறது. பாரதி பாடல் சொல்லித்தருவது வெட்கக்கேடு...... மானியம் பெற்று ஓட்டு போட்டவன் வாய் மூடிக்கிடக்கிறான் அவன் போட்டது ஓட்டா வாய்க்குப் பூட்டா....                                                                        

பாமரன் வாக்கு

படம்
வாழிய ....வாழிய செம்மான் வாழிய! கொடி பிடித்து கூக்குரலிட்ட கோமகன் யாவரும் வாழிய....வாழிய! குமர குருபரனோ சிதம்பர நாதனோ எஞ்சி யிருந்த உயிரையுந் தந்த வாஞ்சி நாதனோ உற்ற நாட்டிற்காக அற்ற பலர் புகழும் வாழிய....வாழியவே! மார் தட்டி மார் தட்டி மானங் காத்த எம்மான் வாழியவே! இப் புகழ் பாடி புகழ் பாடி சுதந்திரம் தம் காத்தோம் நாட்டின் மானங் காத்தோமா........                                                                        

ஒன்பதாம் வகுப்பிலும் புவனா......

இம்முறை ஒன்பதாம் வகுப்பு. அரைப்பரிட்சை ஆரம்பிக்கும் முன்னரே அம்மாவிடம் கேட்டேன்...சுற்றுலா எப்போது. அம்மா சுற்றுலாவை சொல்லிவிட்டு புவனா வந்தாதான் வருவாளாம்....நான் கொஞ்சம் ஆடிபோயிட்டேன்...நானும் சொல்லிவைத்தேன்...புவனா வந்தாதான் நான் வருவேன்...வழக்கம்போல் விடுமுறை ஆரம்பித்தது. புவனா வருவாள் என்பதை உறுதி செய்துவிட்டு இரவு 11 மணி பேருந்துக்கு 6 மணிக்கே பள்ளி சென்றோம்...இம்முறை எல்லா அத்தைகளும் பெரியம்மாக்களும் ஒரே அறையில் இருந்தார்கள்...பதில் சொல்ல எளிது....வேதவள்ளி பெரியம்மா ஆரம்பித்தார்கள்...என்னடா பழனி பரிட்சை நல்லா எழுதிருக்கியா....(கேள்விய இந்த வருஷம் மாத்திடாங்களே)....நல்லா எழுதிருக்கேன் பெரியம்மா.....என சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தேன்... இம்முறை இராஜேஸ்வரி அத்தை பையன் கல்யாண், கிருஷ்ண்வேணி அத்தை பையன் விவேக், மற்றும் இருவர் என்னை வரவேற்று அழைத்துச்சென்றார்கள்....நால்வரும் என்னை சேர்த்துவைத்துக்கொண்டு ஒரு திட்டம் தீட்டினார்கள்...வந்திருக்கும் அத்தைகளின் மகள்களை பார்க்க(சைட்) வேண்டும். அதிலும் (என்) புவனா....(அடப்பாவிகளா)...நான் ஒன்றும் சொல்லவில்லை...ஒரு பைய

எட்டாம் வகுப்பில்...புவனா......

எட்டாம் வகுப்பு அரைப்பரீட்சை விடுமுறை நாட்கள். லீவு முழுக்க கிரிக்கெட் ஆடியே கழிக்கவேண்டும் என மதுரை சிறைக்காவலர் பயிற்சி மைதானத்தை குறி வைத்தேன்...ஆனால் அம்மா வேலை பார்க்கும் ப்ள்ளியில் சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தார்கள். அம்மாவும் நானும் போகலாம் என திட்டமிடப்பட்டது. எனக்கென்னவோ விருப்பமில்லாமல் அம்மாவிடம் மறுப்பைத் தெரிவித்தேன். அம்மாவோ...டேய்..இராஜேஸ்வரி அத்தை பையன் ( அம்மாவுடன் வேலை பார்க்கும் அனைத்தும் ஆசிரியைகளும் எனக்கு அத்தையாகவும் பெரியம்மாகவும் இருந்தார்கள்) கல்யாண், கிருஷ்ணவேணி அத்தை பையன் விவேக் வருவாங்கடா...நீயும் வாடா என்று அழைத்தார்கள். என்ன செயவதென்று தெரியாமல் பாதி சம்மதம் தெரிவித்தேன். ஆனால் முழுமையாக சம்மதிக்க  வைக்க போகும் ஊர்களைப் பற்றி சொல்லலானார்கள். பிறகு தான் சொன்னார்கள் மாணிக்கம் அத்தையின் மகள் புவனா வும் வருவாள் டா என்று...இப்பொழுது முழு சம்மதத்தைத் தந்தேன்.  புவனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) யார் அவள். பார்க்கலாம் என சுற்றுலாவிற்கு தயாரானேன். இரவு 11 மணி அளவில் பேருந்து வருமாம். ஆனால் பள்ளிக்கு 6 மணியளவில் சென்றோம்..முதலில் இராஜேஸ்வரி அத்தை பார

எதார்த்தம்

சமூகம் சுண்டியதில் என் பக்கம் விழும் நிகழ்தகவுகள் வறுமையும், வெறுமையும்..... நான் சுண்டியதில் என் பக்கம் விழுந்த நிகழ்தகவுகள் வெறுப்புகளும், வெற்றிகளும்.....

நான் - நீ 8

படம்
கட்டுப்படாத மனமும் கட்டுப்பட்டது நீ என்னுள் வரும்வரை..... கட்டுப்பட்ட மனமும் கட்டவிழ்ந்தது நான் உன்னில் கட்டுப்படும் வரை.....

நான் - நீ 7

படம்
நானும் என் மனமும் என்னுள்.. உன்னை 'நீ' யாக பார்த்தபோது......! என்னை 'நீ' யாக பார்த்தபோது நானும் என் மனமும் உன்னுள்.......

பௌதீகம்

எதைஎதையோ சொல்லிக்கொடுத்த பௌதீகம் எனக்கும் உனக்குமான ஈர்ப்புவிசையை சொல்லவில்லை நீ நான் நியுட்டன் ஒன்றாயிருந்தால் நான் தான் பிரபலமாயிருப்பேன் ஆப்பிளைக் காட்டிலும்..... உன்னில் விழுந்ததால்......

நான் - நீ 6

படம்
என்னை நீயாக ஆட்கொண்டாய்.... மிச்சமிருப்பது நீயும் நானுமாய் நாமுமாய்.....

தன்னம்பிக்கை 2

எதிர்ப்புகள் மட்டுந்தான் சொந்தம் எதிர்பார்ப்புகள் உனக்கு எதற்கு..... நிகழ்வுகளை நிகழ்த்த வந்தவன் நீ- நிகழ்தகவுகளை பார்ப்பது ஏன்...... வெற்றி இஷ்டங்களையும் கஷ்டங்களையும் உடைத்தால் தான்.... நீ உடைந்தால் எப்படி......

நாட்டுக்காக..........

இவன் ஆவது என நம்பினேன் ஆவதற்கில்லை..... அவன் ஆவது என நம்பினேன் ஆவதற்கில்லை.... எவன் எவனாவது என்றாலும் ஆவதற்கில்லை... நான் ஆவது ஆகிறேன் நல்லவனாக..... நாட்டுக்காக..........

நலம் வாழ

நலம் வாழ உணவைக் குறை; அதிகமாகக் கடித்துண் சவாரியைக் குறை; அதிகமாக நட. உடையைக் குறை; அதிகமாகக் குளி. கவலையைக் குறை; அதிகமாய் வேலை செய். சோம்பலைக் குறை; அதிகமாய் சிந்தி. திரிவதைக் குறை; அதிகமாய்த் தூங்கு. வீண் செலவைக் குறை; அதிகமாய்த் தானம் செய். திட்டுவதைக் குறை; அதிகமாய்ச் சிரி; உபதேசத்தைக் குறை; செயலை அதிகரி. ----------------------------------------மேரி பெனான்ரே
பழனிக்குமார் பக்கங்கள் அரங்கேற்றம் ஆரம்பம்