சலாபம்

கனவுகளிலா இரவுகள்
ஒவ்வொரு கணமும் நீயாக....

வெள்ளைத்தாளின்
மூலை முடுக்கெல்லாம்
விரல் தழுவிய
எழுத்துகள் போல்
நானும் உனதனில்.....


என் தொண்டைக்குழி வார்த்தைகளை
உன் பார்வை மொழி
அசை போட.....
என் செவிப்பறையில் வீழ்ந்த
மௌனத்தை
உன் சுவாசம் சுவாசிக்க....
பரிசம் பிரசவித்த வெப்பத்தில்
நானும் கரைகின்றேன்....

தொலைந்ததைத் தேடி விட்டு
இருப்பதையும் தொலைக்கிறோம்
தேடிக்கொள்ள......

இருளும் நீள்கிறது
விடியல் வந்தாலும்.......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....