இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாய்க்குட்டி 1

நாய்க்குட்டிகள் போல் இருந்துவிடுதல் அவ்வளவு எளிதல்ல.. ரொட்டித்துண்டுகளுக்குப் பின்பான  விரல் வாசத்தைக் கண்டுகொண்டபடி ஆற வேண்டும்... எப்பொழுதும் உடனிருக்கவேண்டும் என்றபடிக்கு முணுமுணுக்க வேண்டும்.. தழுவலிலும் ஆற்றுப்படுத்துதலிலும் ப்ரியத்தின் வாசனையில் போதாமை கொள்ளுதல் வேண்டும். கால்களுக்குள் வட்டமிட்டபடி போகுமிடமெல்லாம் ஓர் உலகம் வரையவேண்டும்.. அதிர்வானச்  சொல்லுக்கும் அன்பானச்  சொல்லுக்கும் ஏங்கியபடி நிற்கவேண்டும்.. மொழியில்லாத சமிக்ஞைகளைப் புரியும்படிக்குக் கைகளைக் கொண்டு அளவளாவியபடி யாசிக்கவேண்டும்.. தவ்வியபடி முகம் நுகர்தல் வெறும் உணவுக்கானதல்ல என்றபடிக்குத் தவமிருக்க வேண்டும்.. நாய்க்குட்டிகளுக்கு ப்ரியமானவர்களின் சாயலைத் தந்துவிடாதபடிக்கு நாய்க்குட்டிகளாகவே இருந்துவிடுதல் அவ்வளவு  எளிதல்ல... 20.35 27/12/2020

காலை மாலை தவறாது...

காலை மாலை தவறாது அன்பாயம்  வழங்கப்படுவதாய் உறுதிமொழியுடன்  நட்சத்திரம் ஒன்று எரிந்து விழுந்தபடி ஓர் இரவு ஆரம்பிக்கிறது. காலை மாலை தவறாது நீர்வார்க்கும் பூக்கள்  நட்சத்திரங்களைத்  தாங்கியபடி மின்னித்தொலையும்- கண்சிமிட்டல்களை மறக்க இயலாதபடிக்கு ஒரு பகல் ஆரம்பிக்கலாம். காலை மாலை தவறாது கால்வருடி பகலை  நீவிவிடும் உன் நாய்க்குட்டிக்கு வெம்மையாய் உன் விரல் தழுவல் தேவைப்படலாம்... காலை மாலை தவறாது வெறுமனே  விரல் தழுவல் வேண்டும் நாய்க்குட்டியின் சாயல் மட்டும் தானில்லை. மற்றபடி நான்- நானே தானன்பே..... 22.33 25/12/20

தூத்துக்குடியும் புயலும்

தூத்துக்குடினு ஒரு ஊர். துறைமுகம் இருக்குறனால பணப்புழக்கம் இருக்குற ஊர். அரசுக்கு வருவாய் தர ஊர். ஆனால் இரண்டு வருடத்துக்கு முன்னதாக தூத்துக்குடி மாநகரில் மழை இல்லை. ஆனால் ஒட்டப்பிடாரம் , கோரம்பள்ளம், தெய்வச்செயல்புரம், புதுக்கோட்டை போன்ற தூத்துக்குடிக்கு அருகில் உள்ள வெளியூரில் பெய்த கனமழையில் பெருக்கெடுத்த ஒரு நாளைய மழை, கால்வாய் வழியாகக் கடலுக்குப் போகும்வழியில் தூத்துக்குடி மாநகரில் புகுந்தது. அந்த ஊர் மக்கள் ஒரு சொட்டு மழை இல்லாமல் அவ்வளவு தண்ணீரை உள்வாங்கினர்.  பிரைண்ட் நகர், அண்ணா நகர்   மில்லர்புரம் போன்ற பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தால் மோட்டர் போட்டு ஒவ்வொரு தெருக்காரர்களும் அடுத்தத் தெருவிற்குக் கடத்தி ஒவ்வொரு தெரு தண்ணீரும் மெயின்ரோட்டிற்கு வந்து பிறகு வடியவேண்டும். சாதாரண அடைமழைக்கே தண்ணீர் வடிய மூன்று நாட்கள் பிடிக்கும். இத்தனைக்கும் அந்தப் பகுதிகளில் நிறைய மேல்தட்டு மக்கள் குடியிருக்கும் எலைட் பகுதிகள்.  மருந்துவிற்பனை பிரதிநிதியின் மேலாளராக, ஒருமுறை  மழை விட்ட மூன்று நாள் கழித்து தூத்துக்குடி சென்றிருந்தேன். நிறைய மருத்துவர்கள் இருக்கும் ஒரு பகுதியே தீவாக மாறியிருந்தது. ஒர

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 7

 பழனிக்குமார் மதுரை விற்பனைப்பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 7 மருந்துவிற்பனைப் பிரதிநிதியின் வேலைகள் என்று சுருக்கமாகச் சொல்வீர்கள் எனில், மருத்துவரைப் பார்க்கவேண்டும், அவரிடம் நமது நிறுவனத்தின் மருந்துகளைப் புரோமோட் செய்து அவரை எழுத வைக்க வேண்டும். இதற்குச் சமமானக் கடினமான வேலை, அந்த மருத்துவர் நம் மருந்தை எழுத ஆரம்பித்துவிட்டால் அவரது அல்லது அவருக்கு அருகில் இருக்கும் மருந்துக்கடையில் நம் மருந்தை ஸ்டாக் வைப்பது. அவர் ஆயிரக்கணக்கான மருந்தை எழுதுவார், அதில் நம் மருந்து எது என்பதை அந்தக் கடைக்காரருக்குத் தெரியப்படுத்தவேண்டும். இதற்காக மருந்துக்கடைகளுக்குச் சப்ளை செய்ய ஒரு மொத்தவிலைக்கடையை (மெடிக்கல் ஹோல்சேல்) நியமித்திருப்போம்.  அந்த மருத்துவர் எழுதுகிறாரா என்பதைப் பார்க்கவேண்டும், அந்தக் கடைக்காரர் வாங்கிவிட்டாரா எனப் பார்க்கவேண்டும், அந்தக் கடைக்காரருக்கு அந்த ஊரின் மொத்தவிலைக்கடைக்காரர் சப்ளை செய்துவிட்டாரா எனப் பார்க்கவேண்டும், இதற்கு இடையில் அந்த மருந்து அந்த மொத்தவிலைக்கடைக்காரரிடம் இருக்கிறதா என்றும் அவ்வப்போது பார்க்கவேண்டும். இது தான் சங்கிலித்தொடர்.  நான் மேலாளராகப் பொறுப்பேற்

பீஹார் தேர்தலின் பிஜேபியின் வெற்றியை முன்வைத்து...

பழனிக்குமார் மதுரை. ஸ்வீட் கடைக்குப் போகிறோம். ஒரு பெரிய ஆர்டர் தரப்போகிறோம். கடைக்காரரிடம் விலை எல்லாம் கேட்கிறோம். அவர் அதைத் தயார் செய்ய  ஏதாச்சும் அட்வான்ஸ் தாங்க என்பார். வியாபாரத்தில் அட்வான்ஸ் தரலாம்.  அட்வான்ஸ் தராமல், ஆர்டர் டெலிவரி பண்ணும்பொழுது கூட முழு பணத்தையும் செட்டில் செய்யலாம் என்று சில நபர்கள் சொல்லலாம். நீங்கள் ஒரு ஃபர்னிச்சர் கடைக்காரரிடம் ஒரு பெரிய மேஜை செய்யச்சொல்கிறீர்கள். அவர் அட்வான்ஸ் கேட்பார். அதைவைத்து சில பொருட்களை வாங்கிக்கிறேன். மீதிப்பணத்தையும் மேஜை செய்துமுடித்து ஒப்படைக்கும்பொழுது வாங்கிக்கொள்கிறேன் என்று கூடச் சொல்வார். நீங்கள் அட்வான்ஸ் தர மறுத்து மேஜையும் செய்தாகி ஒப்படைக்கும்பொழுது அட்வான்ஸ் தராததற்காக பெனால்டிலாம் போடமாட்டார். முன்பணம் என்பது எப்படியும் நாம் தரப்போகிறோம் என்பதற்கான அறிகுறிக்கு உள்ளானது. தரலாம், தராவிட்டாலும் மொத்தமாகத் தரலாம். வியாபார நோக்கில் செயல்படும் வியாபாரிகள் கூட முன்பணம் தரவில்லை என்பதற்காக நம்மிடம் வட்டிலாம் போடுவது கிடையாது. இப்பொழுது கதைக்கு வாருங்கள். தனியார் தொழில் நிறுவனங்களுக்கு அட்வான்ஸ் டேக்ஸ் கட்டவேண்டும் என்று