இடுகைகள்

ஜூலை, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிறுவு 4

பொதுவாக ரிலையன்ஸ் அல்லது பிக் பஸார் போன்ற டிபார்ட்மெண்ட் கடைகளுக்குச் செல்லுகையில் ஒரு ரூபாய் குறைவாகக் கிடைக்கிறதா என்று பார்க்கிறோம். ஆனால் கடை வீதிகளில் நாமே மிகச் சரியாகத் தேர்ந்தெடுத்து கடைகளுக்குச் சென்றோமேயானால் அதை விடக் குறைவாக வியாபாரிகள் தருவார்கள். நேரமின்மை, அலைச்சல் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நானும் கூட சில பொருட்களை இப்படிப்பட்ட டிபார்ட்மெண்ட் கடைகளில் வாங்குவதுண்டு. ஆனால காய்கறிகளை மட்டும் மார்க்கெட்டில் அல்லது உழவர் சந்தையில் வாங்குவதுண்டு. விவசாயிகள்நேரடியாக பயன்பெறட்டும் என நினைப்பதுண்டு. காலையில் உழவர் சந்தைக்குச் சென்று காய்கறி வாங்கச் சென்றேன். சில விசயங்கள் புரிவதில்லை. பீட்ரூட் 20 ரூபாய் என்றார். எனக்குக் கால் கிலோ போதுமென்றேன். கொடுத்தார். பிறகு பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு வாங்கிவிட்டு எவ்வளவு என்றேன். அந்தந்த காய் கூடைகளைப் பார்த்து மனப்பாடமாய் கணக்குச் சொன்னார். 68 என்றார். அவர் பீட்ரூட்டைப் பார்த்துச் சொல்லும்பொழுது மட்டும் 20ஐ கூட்டினார். பீட்ரூட் எவ்வளவு என்றென். 20 என்றார். கால் கிலோவா என்றேன். ஓ...10 தான் என்று மீதி பத்து ரூபா கொடுத்தார். வெண
வலியென்றும் வரையறை வைத்துக்கொளவதில்லை! ஆனந்தச் சிரிப்பிற்குள் இமை இடறிவிடும் சிறு துகளை விழிகள் விலக்கவியலாமல் கலங்கி இயங்குதல் வரையறையில்லா வலி!

முத்தம்

முத்தம் தரமுடியாத் தருணங்களில் எல்லாம் முத்தம் என்றாவது சொல்லிவிட்டுப் போ...!