கழிந்து விட்ட
நாட்களில்
வாழ்ந்ததற்கான
தடயம்...

கொண்டாடிய
நாட்களில்
கொண்டாடப்பட்ட
தருணம்.....

தடுத்தாலும்
தடுதல் ஆனாலும்
ஓடிவிட்ட
மாயை- வாழ்க்கை.....

முட்டிக்கொள்வதற்கும்
முடிந்து கொள்வதற்கும்
எவனவனோ
முன்னேறுகிறான்....

விரலோடு
விரலாகப்
பற்றிக் கொள்ள
வெறுமை மட்டுமல்ல
என்
தனிமையும் உண்டு....

என்னிடம்
நானே
இருக்கின்றேன்...
ஒவ்வொரு
விடியலையும்
தேடிக்கொள்ள.......
                                                                       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....