பாமரன் வாக்கு 2

ஜாதி பெயர் கேட்பவனை
சுட்டுவிட வேண்டும்
முதல் குறி அரசியல்வாதி....
அண்ணன் ஒத்துழைக்கமாட்டான்
அவன் மாவட்டசெயலாளர்....

இனமெனச் சாடுபவனைச்
சாகும்வரை தூக்கிலிட வேண்டும்
தம்பியும் ஒத்துழைக்கமாட்டான்
அவன் தனிஈழ ஏமாற்று அரசியலின்
அடிபொடி.....

பள்ளிக்கூடம் கூட
சாதிச் சான்றிதழ் கேட்கிறது.
பாரதி பாடல்
சொல்லித்தருவது
வெட்கக்கேடு......

மானியம் பெற்று
ஓட்டு போட்டவன்
வாய் மூடிக்கிடக்கிறான்
அவன்
போட்டது ஓட்டா
வாய்க்குப் பூட்டா....
                                                                       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....