கவிதைக் குழந்தை....

இது
அதீத கற்பனை.....
அசரீரி ஒன்று
அழைக்கின்றது.....

மாயக்குதிரையின் வேகத்தில்
மனக்குதிரையும்......

கற்பனைக் கானலில்
மில்டன் கூட பார்க்கிறான்....
பாரதி பார்த்து
கற்பனை யானையும் வீழ்கிறது......

வெள்ளைக் காகிதம்
எடுத்து
எழுதுகோல் விரலோடு
நான் பிறக்கிறேன்.....

தூண்டில் போட்ட
தூக்குத்தண்டனையில்
மீனும் பிழைக்கிறது.....
என் வரி
வாழவில்லை....

வாழையே
வாழை வாழையாய்
வர
தமிழ்
என்ன தரிசு நிலமா.....

கருக்கலைந்த
அகப்பை
கண்ணீர் விடுவதில்லை
கண்கள் மட்டுந்தான்....

உந்தித் தள்ளப்பட
அண்டமாய்
கருத்தரிக்கும்
என்
கவிதைக் குழந்தை....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....