அருகருகே

அருகருகே
உன் வீடும்
என் வீடும்.....

எட்டும் தூரத்தையே
எட்டி எட்டிப்
பார்த்தேன்
உன்னை நான்
எட்டுவதற்காக....

நீ
சோறு ஊட்டுவதற்காக
உன் வீட்டு மாடியில்
காகங்கள் பல....
உண்மையில்
உனக்காக
கரைவது
நான் மட்டும் தான்.....

நிலவொளியில்
நீ
நடப்பதைப் பார்ப்பது
சுகமே...
வானில்
நிலா
காய்கிறதா...
எனக்காக
காய்க்கிறதா.....




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....