பலூன் களைத் தவறவிட்டு பின் ஓடிவரும் குழந்தையின் கண்களைப் போல சுண்டப்பட்ட நாணயத்தை விரல்களுக்குள் ஒளித்துக்கொண்டு பூவா தலையா எனப் பார்க்கும் விழிகளைப் போல திரை விழுந்த பார்வையோடு மங்கலாகத் தெரியும் தொலைதூரப் பேருந்தின் முகப்பு எழுத்தைத் தெள்ளத் தெளிவாய் தேடிப் பார்க்கும் மூதாட்டியின் பார்வைத் தேடல் போல... எல்லா முகங்களிலும் ப்ரியமானவர்களின் முகம் தெரியும்படியாய் காத்திருக்கும் விழிகளைப் போல அப்பொழுது தான் பிரசவித்தத் தன் குழந்தை கண் திறந்துப் பார்ப்பதைப் பார்க்கும் தந்தையின் கண்களைப் போல... முதல் முறையாக புகைவண்டியைப் பிரமிக்கும் சிறுமியொருத்தின் ஆச்சர்யப் பார்வைகளைப் போல வெறுமையின் நாளை முடிக்கும் தருவாயில் கை முழுக்க யாசகம் பெறும் ஒரு யாசகக்காரனின் ஈரக் கண்களைப் போல... பரபரக்கும் சாலையொன்றைக் கை பிடித்து கடக்கும் அறிமுகமற்ற தாத்தா ஒருவரின் நன்றி நவிழும் பார்
"தொடாதீர்கள்; அருகில் தும்மாதீர்கள்" என்கிறார்கள். "ஒரு அடி விட்டு நில்லுங்கள்; வீட்டிற்குள்ளேயே தங்குங்கள்" என ஒலிப்பெருக்கி வைத்து கொட்டாவி விடும் வசனங்கள் ஒலிபரப்புகிறார்கள்.. இது எதுவும் புரிபடாத தங்கம் ஆச்சிக்கு "பூ" வரத்துக் குறைந்த கவலை. "பூ தொடுத்தல்" தங்கம் ஆச்சிக்கு வியாபாரம் அல்ல... அது ஒரு "பசி போக்கல்"; தன்னையே சுற்றிச்சுற்றி வரும் நாய்க்குட்டிக்கு-அது "கொஞ்சம் பாலும், ரொட்டித்துண்டுகளும்". சமூகம் வழங்க மறுக்கும் இளம் கைம்பெண்ணுக்குக் கூடுதலாக ஓர் இணுக்கு பூ தொடுத்தல்- அவ்வளவே... 10/5/2020 22.18
அது கல்லூரி பருவம். இளங்கலை மூன்றாம் ஆண்டு. என்.எஸ்.எஸ் மூலமா ஒரு கேம்ப். நடந்த இடம் கேரளாவில் காலடி சம்ஸ்க்ருத பல்கலைக்கழகம். தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா, ஆந்திரா னு ஏராளமான பல்கலைக்கழகங்கள் கலந்துகொண்ட நிகழ்வு. தமிழ்நாட்டில் இருந்து பாரதியார் பாரதிதாசன் பெரியார் மனோன்மணீயம், அப்புறம் காமராசர் பலகலைக்கழகங்கள்னு மாணவ மாணவிகள் கலந்துகொண்ட ஒரு கலர் கலர் நிகழ்வு. நம்ம காமராசர் பலகலைக்கழகத்திலிருந்து கம்பம் மகேஷ் பாளையம் வீணா சிவகாசி சந்திரு, மதுரைல இருந்து கேசவன், கார்த்திக், அப்புறம் தான் முக்கிய்மான என்ட்ட் ரி நானு. கேம்ப் என்ன னு சொன்னாத்தான் நான் எழுதப்போற புறணி உங்களுக்குப் புரியும். ஜனவரி 26 குடியரசு விழாவில் குடியரசுத் தலைவர் முன்னாடி டில்லியில் பரே டில் கலந்துக்க நடக்குற செலக்ஷன் கேம்ப்.; இது தெரியாம இரண்டு மூணு பக்கிக சமூக சேவைனு ஜாலியா வந்திருக்குதுக... மாலை 4 மணிக்கு பல்கலைக்கழகம் ரீச் ஆனதும் பல பட்டாம்பூச்சிகள் பாக்குற உணர்வு. வெங்கட் பிரபு படத்துல வர்ற பிரேம்ஜி கேரக்டர் மாதிரி நம்ம நண்பன் ஒருத்தன வச்சுக்கிட்டா நல்லாருக்கும்ல....கிடைச்சான் சிவகாசி சந்திரு. ஒண்
கருத்துகள்
கருத்துரையிடுக