பாமரன் வாக்கு

வாழிய ....வாழிய
செம்மான் வாழிய!

கொடி பிடித்து
கூக்குரலிட்ட
கோமகன் யாவரும்
வாழிய....வாழிய!

குமர குருபரனோ
சிதம்பர நாதனோ
எஞ்சி யிருந்த
உயிரையுந் தந்த
வாஞ்சி நாதனோ

உற்ற நாட்டிற்காக
அற்ற பலர் புகழும்
வாழிய....வாழியவே!

மார் தட்டி மார் தட்டி
மானங் காத்த
எம்மான் வாழியவே!

இப்
புகழ் பாடி புகழ் பாடி
சுதந்திரம் தம் காத்தோம்
நாட்டின் மானங் காத்தோமா........
                                                                       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....