கழுத்துக்குக் கீழே
வெள்ளைப் பூத்த
காகம்....

புறாவைப்
படைக்கப்போகும்
கடைசித் தருணத்தில்
பிரம்மன் செய்த
சூத்திரத் தவறு
அந்த காகம்....

நானும் அதுவும்
பேசிக்கொள்ள
ஒரு குவளைத் தண்ணீர்
அலைவரிசை.....

இன்றைக்கு மட்டும்
இன்னும்
பறக்கப்பழக்கப்படாத
தன் வாரிசுடன்
வந்தமர்ந்தது....

நீரிட்டக் கைகளுக்குப்
பிரிவுபச்சாரமாய்
கரைந்தன இரண்டும்.....

நாளை
நிறைந்திருக்கும்
என் குவளை
வெறுமையே......


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....