முற்றும்

எப்பொழுது ம்
இலகுவான வார்த்தைகளை
அது
சொல்வதில்லை...

மிருதுத்தன்மை
கொண்டதான
அடர்த்தியற்ற
ஒரு நிழலை மட்டுமே
விரவச் செய்யும்
திறனற்ற பாசாங்காய்

எவ்வளவு சுவாசித்தாலும்
ஆசுவாசப்பட்டுக்கொள்ளாத
வெள்ளீரல்
வெளிப்பட்டுக்
கதறத் துணியும் கனமாய்

நின்றகலும்
குமிழ்
உடையாதிருத்தலொத்த
திடத்திரவக்
கானல்நீர் நிகழ்வாய்...

ஒற்றையொற்றை
கேசங்கள் உரசும்
நுனியில்
உதறிப்போகும்
ஓருரிமையாயும்....

முயலும்
தருணத்தின்
முந்தையக்
கணத்தில்
முடிந்துபோகும்
ஒரு செயலிழியை
பிரதிஷ்டை செய்யும்
நிகழ்வாயும்...

இந்தப்
பிரிதல்
இனிதாய் ஆரம்பிக்குமாயின்
முற்றுமென
முற்றும் அனைத்தும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....