ஆலவாய்

தூரங்களால் அளவிட முடியாத
ஒரு நெருக்கமும்
வெக்கை தரும்படியான
ஒரு கதகதப்புமாய்
முன்மாலை பொழுதொன்றை
இப்படித்தான் சொல்லியிருந்தேன்..

இன்னொரு முறை
கிட்டிராத
ஒரு தாகத்திற்கானத்
தண்ணீர்த்துளியைப்
பருகுதல் போல
என...

சம்பாஷணையின்
நீட்சியாய்
ஒரு மௌனமும்
முத்தப் பார்வையும்
அந்நாளை
முடித்தன...

பிறிதொரு
முன்மாலைப் பொழுதில்
தனிமையின்
தீயொன்று
முழுதுமாய்
விழுங்கியது போக
எச்சமென
தீர்ந்துபோன
தாகமிருந்தது...

உறைந்துபோன
தண்ணீர்துளியின்
தாக நினைவொன்று
உள்நாக்கின்
மடிப்பிற்குள்
வளைந்து
விரிந்துகொடுத்தது
அனைத்தையும்
விழுங்கிச் சாக!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....