மழைக்குருவி

உங்களுக்கெல்லாம்
காது இல்லாதபோது தான்
அந்த மழைக்குருவி
அழுகிறது.
உங்கள் மீது பட்டுத்
தெறிக்கும்
எல்லாத் துளிகளுக்குமே
நீங்கள்
வெறுப்படையத்தேவையில்லை.
தானாய் விழுந்து
பிறகு
கலைந்து போகும்
வானவில்லைப் போல
வளைந்தொழியும்.
அதுவரையாவது
குடை பிடிக்காதிருங்கள்.
உங்களை நனைத்தப்
பாவத்திற்காகத்தான்
கரைந்தொழுகுகிறது
ஒரு மெழுகைப் போல..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....