அது கல்லூரி பருவம். இளங்கலை மூன்றாம் ஆண்டு. என்.எஸ்.எஸ் மூலமா ஒரு கேம்ப். நடந்த இடம் கேரளாவில் காலடி சம்ஸ்க்ருத பல்கலைக்கழகம். தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா, ஆந்திரா னு ஏராளமான பல்கலைக்கழகங்கள் கலந்துகொண்ட நிகழ்வு. தமிழ்நாட்டில் இருந்து பாரதியார் பாரதிதாசன் பெரியார் மனோன்மணீயம், அப்புறம் காமராசர் பலகலைக்கழகங்கள்னு மாணவ மாணவிகள் கலந்துகொண்ட ஒரு கலர் கலர் நிகழ்வு. நம்ம காமராசர் பலகலைக்கழகத்திலிருந்து கம்பம் மகேஷ் பாளையம் வீணா சிவகாசி சந்திரு, மதுரைல இருந்து கேசவன், கார்த்திக், அப்புறம் தான் முக்கிய்மான என்ட்ட் ரி நானு. கேம்ப் என்ன னு சொன்னாத்தான் நான் எழுதப்போற புறணி உங்களுக்குப் புரியும். ஜனவரி 26 குடியரசு விழாவில் குடியரசுத் தலைவர் முன்னாடி டில்லியில் பரே டில் கலந்துக்க நடக்குற செலக்ஷன் கேம்ப்.; இது தெரியாம இரண்டு மூணு பக்கிக சமூக சேவைனு ஜாலியா வந்திருக்குதுக... மாலை 4 மணிக்கு பல்கலைக்கழகம் ரீச் ஆனதும் பல பட்டாம்பூச்சிகள் பாக்குற உணர்வு. வெங்கட் பிரபு படத்துல வர்ற பிரேம்ஜி கேரக்டர் மாதிரி நம்ம நண்பன் ஒருத்தன வச்சுக்கிட்டா நல்லாருக்கும்ல....கிடைச்சான் சிவகாசி சந்திரு. ஒண்
கருத்துகள்
கருத்துரையிடுக