பூம்பூம் வெய்யில்....

எந்த அன்பும்
அற்ற வெயில்
 கீற்றுகளாய்
இறங்குமொரு
வன்பொழுது...

வியர்வை ஈர
உள்ளங்கைகளில்
சமிக்ஞை காட்டும்
போலீஸ்கார விரல்
நுனியில்
ஸ்தம்பித்து நிற்கும்
நிஜத்தின் நிரல்கள்...

பசியின் ஓலம்
மறைக்கும்
காரின்கண்ணாடி தொட்டு
கை தட்டும்
திருநங்கையின் முகத்தில்
பச்சாத்தாப வெயிலின்
கழிவிரக்கம்..

புறக்கணிப்புகளின்
வெயில் மீது
புன்னகை நிழல்கள்
சிந்தும்
அந்த இருபால்காரியின்
பாதம் வீழும்
 வெயில் நேரத்தில்தான்

அழுத குழந்தையின்
கவனம் பருகும்
ஒரு
பூம்பூம் மாடும்....

இப்பொழுதும் கூட
வெயில்
ஏதாவதொன்றை
விழுங்கவே
விழுகிறது...

ஒரு
காமப்பிசாசைப் போல..


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....