இடுகைகள்

சும்மா ஒரு கதை...

அம்மா வேகமாம்மா .... டைம் ஆயிருச்சு ...... பரபரப்பாய் கிளம்பினான் ப்ரவீன் . முழுப்பெயர் ப்ரவீன் குமார் . வீட்டின் வெளியே இவன் நண்பர்கள் காத்துக்கொண்டிருந்தனர் . முக்கியமாக மாடசாமி ( கல்லூரிப் புகழ் மண்டையன் ) கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 2 நாள் முகாம் ஒரு கிராமத்தில் . கல்லூரியிலிருந்து அக்கிராமம் வந்தடைந்தார்கள் . அக்கிராமத்தில் ஒரு கண்மாய் . அக்கண்மாயிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விட வேண்டும் . ஆனால் கால்வாய் முழுதும் முள்செடிகளும் , மணல்மேடுகளும் , சிதைந்த கரைகளுமாய்ருந்தன . அதைச் சீர் செய்ய 4 கல்லூரிகளின் மாணவர்கள் வந்திருந்தனர் . அதில் தான் நம் ப்ரவீன்குமாரும் , மண்டையனும் . பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வேலைகள் பகிரப்பட்டன . ப்ரவீனும் , மாடசாமி என்ற மண்டையனும் அரிவாள் , மண்வெட்டி சகிதமாக ஒரு ட்ராக்டரில் மற்ற மாணவர்களுடன் கிளம்பினர் . " ஏண்டா மண்டையா ! இவனுக கூப்பிட்டு போறத பார்த்தா ... கண்மாயிலிருந்து கடல் வரைக்கும் தூர் வாறனும் போலேயே .... இல்ல ப்ர...

"வியலும்....ஸ்டார்ட் ம்யூசிக்"

அப்பொழுது நான் முதுகலை முதலாண்டு படித்துக்கொண்டிருந்தேன். வேதியியல் துறை. வேதியியல் துறை என்னையும் ஒரு வேதிப் பொருளாக மாற்றிக்கொண்டிருந்தது. அப்போது யாராவது கவிதை எழுதுகிறார்கள் என்றால் ஆர்வமாகப் படிப்பேன். நமக்குக் கவிதை அவ்வளவாக வராது. (அவ்வளவாக என்பது அபாண்டம்....சுத்தமாக வராது) ஆனலும் முயற்சி செய்வேன். வார்த்தைகளை மாற்றி மாற்றிப் போட்டு ஒன்றுக்குக் கீழாய் ஒன்று எழுதி கவிதை எனப் பிரகடனம் செய்துவிடுவேன்.(இப்ப வரைக்கும் அப்படித்தான்)... அச்சமயங்களில்....என் வீடு...சொல்லியே ஆகனும்... என் தந்தை- ஜாலியான அப்பா....கண்டிப்பான தமிழ் ஆசிரியர். என் தாய்- கண்டிப்பான அம்மா...கண்டிப்பான ஆசிரியை. டிஸிப்லின் னு வந்துட்டா....அதாங்க ஒழுக்கம்...னு வந்துட்டா...மிலிட்டரி ஆபிஸர்ஸ் மாதிரிதான்.... என் அண்ணன்- ஒரு வினையூக்கி (கெமிஸ்ட்டரி படிச்சவங்களுக்குத் தெரியும்.....வினையூக்கி வினையில் ஈடுபடாது....ஆனால் வினையை வேகப்படுத்தும்) போல் தான்... படிப்பு ஒழுக்கம் தவிர வீடு ஜாலி எல்லாரையும் சொல்லிட்டேன்...அப்புறம் நான்...நம்ம செயல்பாடு பாருங்க தெரியும்..... வீட்ல லேண்ட்லைன் ஃபோன் இருக்கும்... ஆனால் ரொம்ப நே...

உயர்திணை

அது ஒரு மரத்தடி. ஒரு கடையின் முகப்பு. ஒரு நண்பனின் வருகைக்காகக் காத்திருந்த் நேரம். அவன் இடப்பக்கமாய் வருவானா...வலப்பக்கமாய் வருவானா என விழித்திருந்தத் தருணம். அப்பொழுது என் காலில் ஏதோ ஊர்ந்த உணர்வு. கீழே பார்த்தேன். நகர்ந்து பார்த்தேன். மீண்டும் காலை யாரோ தொட்டதுபோல் உணர்வு. ஓர் ஆடு படுத்திருந்தது நான்கு கால்களையும் நீட்டி...... ஒருவேளை இந்த ஆடாக இருக்குமோ?????? சில நேரங்களில் நாம் அஃறிணைகளை மதிப்பதே இல்லை. மறுபடியும் நண்பனைத் தேட ஆரம்பித்தேன்.ஆனால் மீண்டும் அதே உணர்வு. காலை யாரோ தொட்டுவிட்டு எடுத்து விடுகிறார்கள். இம்முறை முகத்தைத் திருப்பி கண்களைக் காலில் வைத்தேன். அந்த ஆடு தான்..... தன் முன்னங்கால்களை என் கால் விரல்களோடு ஒட்டி வைத்தது. சட்டென்று ஆட்டினைப் பார்த்தேன். நாம் சிறு குழந்தைகளைத் தலையில் தட்டி விளையாடி அவர்கள் பார்க்கும்போது சிரிப்போம் அல்லவா....அவ்வாறு ஆடு என்னைப் பார்த்தது. "என்ன" என்று கேட்பது போல் ஆட்டினைப் பார்த்தேன். அதுவும் பதிலுக்கு "என்ன" என்று கேட்பது போல் என்னைப் பார்த்தது. அது கருப்பு-வெள்ளை உடம்பு. முகம் முழுக்க...

முத்தம்

உன்னை விட்டுச்செல்லும் ஒவ்வொரு கணத்திலும் உன் இதழ் பறித்துச் செல்லத்தான் ஆசை அதனால் தான் என்னவோ என் முத்தங்கள் உனக்கு இனிக்கின்றன......

மிஸ்டர்..எக்ஸ்

மதுரை புத்தக கண்காட்சி இதற்கு சில முறைகள் சென்றிருக்கிறேன். ஒரு முறை மதுரை முகநூல் நண்பர்களைப் பார்க்க. ஒரு முறை அலுவலக ஊழியர்களுடன்.... இப்படி போனவன் ஒரு முறை ஒரு நண்பனுடன் சென்றிருந்தேன்...அது யார் என்பது சஸ்பென்சாக வைத்துக்கொள்ளலாம். கடைசியாகக் குறிப்பிடுகின்றேன். அதுவரை அவருக்கு ஒரு பெயர் வைத்து இந்தக் கட்டுரையைத் தொடரலாம். என்ன பெயர் வைக்கலாம்....ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்....(யோசிக்கிறேன்)ம்.ம்.ம்.ம்.ம் மிஸ்டர்.எக்ஸ் அதென்ன எக்ஸ் னு கேக்குறீங்களா..... கொய்யாலே...நானும் பத்தாம் வகுப்புல இருந்து பாக்குறேன்....தமிழ் மீடியம் னு கூட பாக்காம....கணக்குப் பாடமா இருக்கட்டும், குவாண்டம் இயற்பியல் இல்லாட்டி வேதியியல் பாடமா இருக்கட்டும்...கண்டுபிடிக்கப்போறத எக்ஸ் னு வச்சுக்கோனு சொல்றானுக...ஏன்  தமிழ் மீடிய பசங்களுக்காகவாவது இந்த எக்ஸ் க்கு பதிலா ஒரு  "அ" னா இல்லாட்டி " ஆ" வனா....ஒரு  "ஐ"னா னு சொல்லலாம்ல....இந்த தமிழினத்தலைவர்கள்லுலாம் இதுக்கெல்லாம் போராட்டம் நடத்தமாட்டாங்களோ... விடுங்க நம்ம கதைக்கு வருவோம்.....ஸோ..நம்ம நண்பன் பெயர்....."மிஸ்டர். எக்...