இடுகைகள்

இரா.முருகவேள் எழுதிய 'முகிலினி' நாவலை முன்வைத்து....

இரா.முருகவேள் எழுதிய 'முகிலினி' நாவலை முன் வைத்து... பழனிக்குமார் மதுரை. 2003-04 காலகட்டம். மதுரையிலிருந்து மாற்றுதலாகி கோயம்புத்தூருக்குப் போயிருந்தேன். ஒரு முறை நண்பருடன் சேர்ந்து மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு வேலை நிமித்தமாக மலை ஏற ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் வண்டியை ஓரமாக நிறுத்தி அந்த உயரத்திலிருந்து தூரத்தில் ஊர்களைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்பொழுது ஓர் ஆலையைக் காண்பித்தான். இந்த 'முகிலினி' யைப் படிக்க ஆரம்பித்ததும் 17 வருடங்களுக்கு முந்தைய அந்த ஞாபகம் வந்தது. அந்த நண்பனுக்குத் தொடர்பு கொண்டு நீ காண்பித்தது எந்த ஆலை என்றேன். அவனுக்கு அது ஞாபகம் இல்லை. பிறகு ஆமா...விஸ்கோஸ் ஃபேக்டரியா என்று கேட்டான். அதைப் பற்றி ஒரு புத்தகம் உங்கூரு காரர் தான் எழுதிருக்கார். படிச்சிட்டு இருக்கேனு சொன்னேன். ஆமாமா, அந்த ஃபேக்டரிய அந்த சிறுமுகை ஊர்க்காரங்களே உள்ள புகுந்து கொள்ளை அடிச்சுட்டாங்களாம் என்றான். அப்பொழுது அந்தப் புத்தகத்தில் வெறுமனே முப்பது ஐம்பது பக்கங்கள் தான் படித்திருந்தேன். புத்தகத்தை முழுதாய் படித்துவிட்டப்பிறகு என் நண்பன் சொன்னது உண்மை த...

கொரொனாவும், டெங்குவும்.

மதுரையில் தீவிர ஊரடங்கு முடிவுக்கு வந்து சாதாரண ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இனி சரக்குகள் ப்ளாக்கில் விற்கமாட்டார்கள். கடைகள் கொஞ்சம் திறந்திருக்கும். வேலை இல்லாமல் இருந்தவர்கள் வேலைக்குச் செல்ல வாய்ப்புண்டு. மற்றபடி மக்கள் நடமாட்டத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. எல்லா மாண்புமிகு மக்களும் எப்பொழுதும் போல் தான் ரோட்டில் தான் திரிகிறார்கள். 100 , 200 பாசிட்டிவ் நோயாளிகள் மதுரையில் வந்தபொழுது எல்லாம் தீவிர ஊரடங்கில் வீட்டில் இருந்துவிட்டு 400 சொச்சம் வரும் பொழுது ஊரடங்கு தளர்வது என்ன வகையான டிசைன் என்று தெரியவில்லை. இப்பொழுது மதுரை உட்பட பல மாவட்டங்களில் மழை. குறிப்பாக தென் மாவட்டங்களில். கொசு வர ஆரம்பித்துவிட்டது. எஃப் எம் ரேடியோக்களில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சகம் சார்பாக கொசுவை விரட்டுவோம் மலேரியா போன்ற தீவிர நோய்களை அழிப்போம் என்ற விளம்பரம் வருகிறது. கடந்தவருடங்களில் இது போன்ற பருவங்களில் டெங்கு தென் மாவட்டங்களைச் சூறையாடியது. குறிப்பாக 2017 2018 களில். இப்பொழுது கொசு பருவம் வந்திருப்பது டெங்குவை அதிகரிக்கச்செய்யும். இதை அரசாங்கம் நல்ல வ...

கவிப்பேரரசு பிறந்தநாள்

சமூகத்தில் உலகமயமாக்கல் அனுமதிக்கப்பட்டதும், வாழ்வியலில் பின்நவீனத்துவங்கள் பல புகுத்தப்பட்டன. மனிதன் உண்ணும் உணவு , உடுத்தும் உடை, பாவனை, அவனது தோற்றம் எல்லாம் மாற ஆரம்பித்தன. மெல்ல ஒரு மனிதனின் கலாச்சாரமும் பழக்கவழக்கமும் மாற ஆரம்பித்தன. நம் தமிழகமும் இப்படியானப் பல புதிய மாற்றங்களை உள்வாங்கியது. மேற்கத்திய இசையும் இலக்கியமும் வெகு எளிதாக ஒரு மனிதனை வந்தடைந்தன. பிறிதொரு கலாச்சாரத்தை , இலக்கியத்தை மனிதன் தேடி அடைந்ததுபோக அவை மனிதனை வந்தடையும் காலமாக மாறியது. பல தமிழ்மாணவர்களும் இளைஞர்களும் மேற்கத்திய இலக்கியங்களையும் வட இந்திய ஹிந்தி இலக்கியங்களின் பாலும் போய்க்கொண்டிருந்தச் சமயம் என்பது தமிழ் இலக்கியலாளர்களுக்கு வெகு சிரத்தையானப் பருவம். இப்படியான இக்கட்டானச் சமயத்தில் தான் வைரமுத்துவின் பாடல்வரிகள் ஒலிக்க ஆரம்பித்தன. மொழி ஆர்வம் மிகுந்தவர்கள் மொழியையும் பாடலையும் சந்தத்தையும் ரசிப்பது இயற்கையே. அவர்களுக்கு வைரமுத்துவைப் பிடித்ததில் என்ன ஆச்சர்யம் இருந்துவிடப்போகிறது.  தமிழைப் பற்றி முழுதாய் அறிந்துகொள்வதற்கு முன் அல்லது பகட்டு படாடோபித்தனத்திற்காக ஆங்கிலம் மற்றும் இந்தி மொழ...

மதுரை வங்கி மூடல்

மதுரையில் லாக்டவுன் நீடித்துக்கொண்டிருக்கிறது. நோய் தொற்றின் தீவிரம் அதிகரித்திருக்கிறது. இருக்கட்டும். சுகாதாரத்துறை ஊழியர்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளார்கள். இருக்கட்டும். காவல்துறையும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது, இருக்கட்டும். இந்த வங்கிகளுக்கு என்ன கொள்ளை வந்திருக்கிறது . ஷட்டரை பூட்டிக்கொண்டும் வெளிக்கதவைப் பூட்டிக்கொண்டும் உள்ளே வேலை செய்கிறார்கள். வெளியே போர்ட் வைத்திருக்கிறார்கள். தனி நபர் சேவை கிடையாது. ( மதுரை அண்ணா நகர் பேங்க் ஆஃப் இந்தியா) எனக்குத் தெரிந்து இந்தியன் வங்கி ,பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி களில் குறிப்பாய் முதியோர் பென்ஷன் மற்றும் படிப்பறிவில்லாத பாமர மக்கள் வந்து போகும் மற்றும் பரிவர்த்தனை செய்யும் வங்கிகள். நான் என் பகுதியை மையமாக வைத்து என் அனுபவத்தில் வைத்துச் சொல்கிறேன். ஒவ்வொருமுறையும் பேங்க் ஆஃப் இந்தியாவிற்குள் எந்தவித அவசரமான வேலையை வைத்துக்கொண்டு போனாலும் தாமதமாகிவிடும். காரணம் ஏதாவது ஒரு வயதான பாட்டி அல்லது தாத்தா , பணம் எடுக்கனும் எழுதித் தா சாமி என்று கேட்பார்கள். அவர்கள் எடுப்பது ஆயிரம்...

ராதே...

படம்
நினைவுகளைத் தொலைத்த இடங்களிலெல்லாம் ராதே- மூங்கிலின் அழுகுரல் மட்டுமே குழலிசை ராதே

உன்னாலானது

வண்ணத்துப்பூச்சிகளை வரைந்து வைத்திருக்கும் நாட்குறிப்பேட்டின் இன்றைய நாள் உன்னாலானது!

நானுனக்கு....

தவழ்ந்து ஊர்ந்து பின் மூழ்கிடு- ஒரு குளம் நானுனக்கு!