சிறகு.....

இலைகளினூடே
இலகுவாய்
அது
இறகு....

வளியூடக வாயிலில்
வலியின்
வழியாய்

அது சிறகு....!

பறக்கும் திசை
பிடிக்காமல்
பறவையிடத்து
உறிந்து வந்ததோ....

இதுவும்
தேவையில்லையென
ஏதோ ஒரு
சமணப்பறவையே
அறுத்தெறிந்ததோ....


யாருக்குத் தெரியும்...

எனக்காய்
ஏதோ ஒரு தேவதையின்
காலந்தாழ்த்தி
அனுப்பப்பட்ட
மடலோ

அச் சிறகு.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....