ஓரிழப்பைப் பெற்ற வீடு
பாவம்....!

சேகரமாயிருந்த ரோஜாக்களெல்லாம்
நுகர மறுத்து
சாலைக்குத் தள்ளப்படும் வாசல்கொண்டவீடு
 பாவம்....

சவம் கிடத்தப்பட்டத் தரையை
எந்தச் சலனமுமின்றி
இரத்தச்சம்பந்தமில்லா மூதாட்டி
ஒருத்தித் துடைத்தல் கொண்ட வீடு
பாவம்....!

எல்லாம் முடிந்த பின்னும்
ஒருவரைத் தவிர-
எப்போதும் போல்
எல்லோரும் ஆகும் வரை
அவ்வீடு பாவம்...!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....