யாதெனின்

இவற்றுக்குப் பின்னும்
தெரிவிப்பது
யாதெனின்....
வலியினும் வலியதான
உன்னூடலின்
சுமை
சுமையானதென....

விருப்புக்கப்பாற்பட்டு
விலகவியலும்
உன் அன்பின் ஈரம்
காயாதிருக்குமென...
வனாந்திரங்கள்
நீயற்றுப்போய்
என்னை
வெறுப்பதென...
தேடிக்களைத்து
ஒடிந்த சிறகுகளின்
நெடி கொண்ட
பட்டாம்பூச்சியென...
ஆகிக்கொண்டே இருக்கும்
ரஸவாதத்தின்
உச்சபட்சம்
நான் நானற்றுப்போதல்....
சாபங்களுக்குள்ளாகிக்
கிடக்கும்
இக்கவிதை
முடியட்டும்
நீயாய்...!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....