நெடுவாசல்

வான்வெளியில்
வலம் வரலாம்

காற்றலைகளுடன்
பேசி சிலாகிக்கலாம்...

எதிர் குரல் அற்ற
மோன நிலையின்
அபத்தங்கள் அங்குதான்...

பெயர் பொறித்த
ஆடையுடன்
ஜொலிக்கலாம்..

வண்ண வண்ண
விளம்பரங்களில்
மிடுக்கலாம்..

எதார்த்தங்கள்
தெரியாத
மயக்கங்கள் அங்குதான்..

தேவையற்றச் சிலைகளின்
காடழுகும் சிலாகிப்புகளை
மண்டியிட்டு
பிரகடனப்படுத்தலாம்...

எங்களின்
உடனடித்தேவைகளில்
பசி மட்டுந்தான் ஆண்டவரே...
பிரார்த்தனைகளில்லை...

இதோ...
முதுகில் குத்தப்பட்டத்
தடங்களோடு
மார்பு காட்டி
உங்கள் வாசல் கிடக்கிறோம்...

வழக்கம்போல்
ஒரு நச்சு
உங்கள் வசம் இருக்கலாம்...
கலைத்து விடவும்
அழித்து விடவுமென
கடவுச்சொற்கள்
உங்கள் வசம் இருக்கலாம்..

அழிந்துபோன
நாகரிகத்தின் பெயரால்
நாங்கள் அழைக்கப்படும்
ஒரு நாளில்

பேயெனத்தெரியாமல்
மான் கள்
உங்கள் காவடி
ஏந்தியிருக்கும்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....