இடுகைகள்

நிறுவு - 2

பொதுவாக தலைமைப்பண்பு என்பது ஏதோ ஒரு பயிற்சிக்கூடத்தில் சேர்ந்து பயில வேண்டியது போல் நம்மில் நிறைய பேர் நினைக்கின்றனர் . அப்படியல்ல . பொறுமை , ஆர்வம் , சகிப்புத்தன்மை , சோர்விலா முயற்சி இவை இருந்தாலே போதும் . ஒரு செயலைச் செய்ய வைப்பதற்கு நாம் அதை செய்து காட்டவேண்டும் . அனைவருக்கும் தெரிந்த ஒரு கதை இருக்கிறது . சோழர்கள் மீது பாண்டியர்கள் படையெடுத்த சமயம் . பாண்டியர்களின் படை முன்னேறிக்கொண்டிருந்தது . சோழ வீரர்கள் பெரும்பான்மையானோர் வீழ்த்தப்பட்டிருந்தனர் . சிலர் சிறைபிடிக்கப்பட்டனர் . படை சிதறியிருந்தது . மீதியிருந்த கால்வாசி வீரர்களும் மனதால் சோர்வடைந்திருந்தனர் . காயம் காரணமாகவும் , தன்னம்பிக்கை அற்ற காரணத்தினாலும் தோல்வி உறுதி என நம்பியிருந்தனர் . இந்நேரத்தில் இவ்விசயம் சோழ மன்னனுக்குச் சென்றது . அப்போதைய மன்னன் விஜயாலயச் சோழன் . அந்நேரத்தில் விஜயாலயச் சோழன் வயதானவன் . போரில் அதிகம் ஈடுபட்டு கால்களை இழந்தவன் . மன்னன் போர்க்களத்திற்கு வந்தான் . சோர்வடைந்த வீரர்களைப் பார்த்தான் ... நான்கு வீரர்களை அ...

நிறுவு - பாகம் 1

ஒரு தொழிலாளியாக அதுவும் ஓர் ஆளுகைக்கு உட்பட்டு நாம் வேலை பார்ப்பதற்கும் அதே சமயத்தில் நாமே ஒரு மேலதிகாரியாய் உயர்வு பெற்று வேலை வாங்குவதற்கும் வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறீர்களா ..... அப்படி உணர்ந்தீர்கள் என்றால் உங்களின் தலைமைப் பண்பு பற்றி நீங்களே ஒரு சுய பரிசோதனை செய்திருக்க வேண்டும் . " இதனை இவன்முடிப்பான் என ஆய்ந்து அதனை அவன்கண் விடல் " என்று இருப்பது தான் வள்ளுவர் சொல்லும் தலைமைப்பண்பு . டெலிகேஶன் என ஆங்கிலத்தில் சொல்வார்கள் . அதிகாரமிக்க பதவியிலிருப்பவர்கள் கூட இப்பண்பைப் பெறாது தோற்று இருக்கிறார்கள் . பொதுவாக ஒரு வேலையைச் செய்வதற்கும் அடுத்தவர்களைச் செய்ய வைப்பதற்கும் வித்தியாசம் உண்டு . கொஞ்சம் கடினம் . கட்டிடம் கட்டுவதற்கு பக்குவமான செங்கல் கலவை மண் இதையெல்லாம் வைத்துக்கொண்டு ஒரு மேஸ்திரி வேலையை வேகமாக செய்வார் . அதே சமயத்தில் ஒரு சித்தாளை அதை செய்ய வைப்பது அதே காலகட்டத்தில் முடிப்பது கடினம் . இந்த உணர்வு ஏதோ அலுவலகத்தில் மட்டும்   தான் இல்லை . வீட்டில் கூட . புதியத...

நிறுவு ட்ரையல்

நிறுவு.....அருமையான வார்த்தை.....அனுபவமாயிருக்க வேண்டும். அதே நேரத்தில் உளவியல் சார்ந்ததாயிருக்க வேண்டும். இப்படியொரு அளவுகோலைக் கொண்டே சில நாட்களாய் " நிறுவு" என்ற தலைப்பு என்னை ஆட்கொண்டிருக்கிறது. வியாபாரத்துறையில் இருப்பவர்களுக்கு உபயோகமாயிருக்க வேண்டுமென்றே எழுத என்னைத் தூண்டிய இவ்வார்த்தை எனக்குள் ஒரு பிரவாகம் எடுத்தது. வியாபாரம் என்பது என்ன? ஒன்றை விற்பது...அதற்குப் பதிலாக ஒன்றை நாம் சொந்தமாக்கிக்கொள்வது. இதை கண்ணுக்குப் புலப்படாத நம் எண்ணங்களை விற்றால் என்ன ஆகுமென்று யோசித்துப் பார்த்தேன்....அனைவருக்கும் பயன்படத்தான் செய்யும் என்பதே என் அனுமானம். ரோட்டில் நாம் செல்லும்பொழுது பிளாடஃபார்ம் செல்லர்ஸ் (platform sellers)இருப்பார்கள்.  அவர்கள் சமயத்தில் விற்கும் பொருட்கள் நாம் வாங்க வேண்டுமென்று முன்னரே திட்டமிட்டிருப்பதில்லை....ஆனாலும் அவர்களது விற்கும் முறையில் ஏதோ நம்மை கவர்ந்து நாம் வாங்குவோம். அல்லது வாங்கப்படுவோம். அவர்கள் அப்பொருட்களை நம்மிடம் திணிக்கக்காரணிகள் என்ன? நம் தேவை தவிர வேறு என்னவாயிருக்கும்? "நிறுவு" அதை நிறுவும்..... சமூகத்தில...

சத்தியசோதனை!

அங்குமிங்கும் செல்வோரில் அங்கும் செல்வோருண்டு! அது பழைய புத்தகக் கடை! எண்பது ரூபாய்க்கெல்லாம் கம்பனின் இராமாயணம் கிடைக்கிறது! என்ன செய்வது? அங்கும் சீதை தீக்குளிக்கத்தான் வேண்டும்! அதிகாரவரம்பின்றி எல்லா அதிகாரங்களையும் முப்பது ரூபாய்க்கெல்லாம் வழங்குகிறார் வள்ளுவர்! கம்யூனிசத்தில் அழுக்குப் படிந்துள்ளது! மூலதனத்தில் ஒட்டு போட்டிருக்கிறார்கள்! வெறுமனே பார்த்துவிட்டு நகர்ந்தோரிடத்தில் கேட்கும் காசிற்கே "சத்தியசோதனை" தருவதாய்ச் சொல்கிறார்கள்..... சத்தியசோதனை!

பால்யக்காதலிகள்

பால்யக்காதலிகள் பரஸ்பரமானவர்கள் அல்லர்! என் இதயக் கல்லுக்கு முதல் உளி செய்து கொடுத்தவர்கள் அவர்கள்! என் கடிகார முட்களை முன்னோக்கியே நகர்த்திக்கொண்டிருந்தவர்கள் அவர்கள்! தாஜ்மகாலை படம் வரைந்து பாகம் குறிக்கச் செய்த மும்தாஜ்கள் என் பால்யக்காதலிகள்! சில தெருக்களின் நீள அகலங்களை அங்கலாய்க்கச் செய்தவர்கள் அவர்கள்! மிட்டாய் துண்டுகளைத் துண்டாடி அதன் பாதியைப் பகிரப் பயிற்றுவித்தவர்கள் என் பால்யக்காதலிகள்! கோயில்விழா இரவு கச்சேரிகளில் இசையை மீட்டுக் கொடுத்தவர்கள் அவர்கள்! கொடுக்காமல் புதைக்கப்பட்ட சில வாழ்த்து அட்டைகளில் இன்னமும் வாழ்பவர்கள் என் பால்யக்காதலிகள்! என் சாளரங்களை வேவு பார்த்த தேவதைகள் அவர்கள்! வெயில் நேரத்து மழையாய் என் வாசல் நனைத்துச் சென்ற மழைக்காயங்கள் என் பால்யக்காதலிகள்! காலியாயிருக்கும் பக்கத்து இருக்கைகளைக் கண்களால் குடிகொள்ளச் செய்தவர்கள் அவர்கள்! மேகம் விலகிய பின்னும் கலையாத வானவில் கூட்டம் என் பால்யக்காதலிகள்! பழைய பூங்காக்கள் கோயில்களின் எனக்கானப் புராதனங்கள் அவர்கள்! என் பால்யப்புகைப்படத்தின் நிழற...

பிராட்....பிராராராட்....பேண்ட்

ஓர் உறவுக்காரர் என்னை அழைத்து அவருடைய பிராட்பேண்ட் இண்டர்நெட் கனெக்ஸன் சரியில்லையெனவும் அதை எங்கு புகார் செய்யவேண்டும் எனவும் கேட்டார். நமக்குத் தான் சமூக சேவைனா ஆளா பறப்போமே.....பரவாயில்லை நானே புகார் செய்ஞ்சுறேனு வாக்குக் கொடுத்தேன்.....அங்க ஆரம்பிச்சது என்னோட இந்த வாரம்...... மதுரையில இருக்குறவங்களுக்குத் தெரியும் பி.ஸ்.என்.எல் ஆபிஸ் அமைப்புப் பற்றி. மதுரை தமுக்கம் மைதானத்திற்கெதிராய் பல ஏக்கர் நிலப்பரப்போடு தலைமை போஸ்ட் ஆபிஸ், டெலிபோன் எக்ஸ்சேஞ் என எல்லாம் சேர்ந்து ஒரே இடம்.....ஆனால் பயங்கர இட வசதி....... அந்த ஆபிஸிற்கு இரண்டு நுழைவுவாயில்கள் கிழக்கு பார்த்து ஒன்று......(அது ஒரு மெயின் ரோடு) வடக்கு பார்த்து ஒன்று அது ஒரு மெயின் ரோடு. நான் கிழக்கு பார்த்த ரோட்டில் உள்ள வாசல் வழியே நுழைந்தேன்....வாடிக்கையாளர் சேவை மையம் னு போட்ருந்தானுக.....வண்டிய பார்க் பண்ணிட்டு நானும் என் நண்பனும் வாடிக்கையாளர் சேவை பிளாக்கிற்கு நடந்தோம். நமக்குத்தான் மூளை கண்ணாபிண்ணானு வேலை பார்க்குமே.......அதுவும் ஒரு மணி வெயில்வேற....எப்படியிருக்கும்......கேக்கவா  வேண்டும்.....ஒரு மரத்தட...

சும்மா ஒரு கதை...

அம்மா வேகமாம்மா .... டைம் ஆயிருச்சு ...... பரபரப்பாய் கிளம்பினான் ப்ரவீன் . முழுப்பெயர் ப்ரவீன் குமார் . வீட்டின் வெளியே இவன் நண்பர்கள் காத்துக்கொண்டிருந்தனர் . முக்கியமாக மாடசாமி ( கல்லூரிப் புகழ் மண்டையன் ) கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 2 நாள் முகாம் ஒரு கிராமத்தில் . கல்லூரியிலிருந்து அக்கிராமம் வந்தடைந்தார்கள் . அக்கிராமத்தில் ஒரு கண்மாய் . அக்கண்மாயிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விட வேண்டும் . ஆனால் கால்வாய் முழுதும் முள்செடிகளும் , மணல்மேடுகளும் , சிதைந்த கரைகளுமாய்ருந்தன . அதைச் சீர் செய்ய 4 கல்லூரிகளின் மாணவர்கள் வந்திருந்தனர் . அதில் தான் நம் ப்ரவீன்குமாரும் , மண்டையனும் . பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வேலைகள் பகிரப்பட்டன . ப்ரவீனும் , மாடசாமி என்ற மண்டையனும் அரிவாள் , மண்வெட்டி சகிதமாக ஒரு ட்ராக்டரில் மற்ற மாணவர்களுடன் கிளம்பினர் . " ஏண்டா மண்டையா ! இவனுக கூப்பிட்டு போறத பார்த்தா ... கண்மாயிலிருந்து கடல் வரைக்கும் தூர் வாறனும் போலேயே .... இல்ல ப்ர...