இடுகைகள்

வாழ்த்து

இன்று காலை அதே உணர்வு. பள்ளியில் படிக்கும்பொழுது பிறந்தநாளன்று சீருடை அணியத்தேவையில்லை. புத்தாடை அணிந்து கொள்ளலாம் என்று காலையில் சீக்கிரம் எழுந்து ஒரு விதமான உற்சாகத்துடன் இருப்போமே அப்படி. ஒரு குழந்தைக்குப் புத்தாடையோ, நண்பர்களோ, அந்த பிறந்தநாளோ அப்படிப்பட்ட உணர்வு , காலம் செல்லச்செல்ல பொறுப்புகள் கூட கூட பிற்காலத்தில் வருவதில்லை. ஆனால் அதே உணர்வு மறுபடியும் நண்பர்களின் வாழ்த்துகளால். வாழ்த்துதல் எவ்வளவு உன்னதமான காரியம் என்பது தெரிகிறது. பறத்தலில் ஒரு முக்கிய அறிவியல் சூத்திரம், இறக்கைகளுக்கு அடியில் கொடுக்கப்படும் சிறிய அளவிலான உந்தம். கொஞ்சம் பறக்கின்றேன். மறுபடியும் குழந்தையாதல் அனைவருக்கும் விருப்பமுள்ள ஒன்றே. நான் ஆகியிருக்கின்றேன். தினசரி கடக்கும் வெகுச் சாதாரண நாளாய் மற்றவர்களுக்குத் தெரிந்தாலும்,  என்னுலகில் உலவிக் கொண்டிருக்கும் இந்நாளுக்குள் உட்புகுந்து எனக்காய் சில புன்னகைகளையும் சில வார்த்தைகளையும் விடுவித்துச் செல்லுதல் கலைந்து செல்லும் மேகங்கள் போல் இல்லை அவை. ஒவ்வொருவரின் மனத்துக்குள் மகிழ்ச்சியை மலராய் தூவிடலாம். நிகழ்ந்திருப்பதாய் நான் நம்புவத...

யாதெனின்

இவற்றுக்குப் பின்னும் தெரிவிப்பது யாதெனின்.... வலியினும் வலியதான உன்னூடலின் சுமை சுமையானதென.... விருப்புக்கப்பாற்பட்டு விலகவியலும் உன் அன்பின் ஈரம் காயாதிருக்குமென... வனாந்திரங்கள் நீயற்றுப்போய் என்னை வெறுப்பதென... தேடிக்களைத்து ஒடிந்த சிறகுகளின் நெடி கொண்ட பட்டாம்பூச்சியென... ஆகிக்கொண்டே இருக்கும் ரஸவாதத்தின் உச்சபட்சம் நான் நானற்றுப்போதல்.... சாபங்களுக்குள்ளாகிக் கிடக்கும் இக்கவிதை முடியட்டும் நீயாய்...!

கல்

கல் என்றால் பாறாங்கல் இல்லை. கல் என்றால் படி. நான் சொல்லப்போறது எல்லா மொழியும் படி. எவனோ சொல்றானேனு ஹிந்திய படிக்க மாட்டேன்...நான் தமிழ்நாட்டுக்காரன் அப்படி இப்படி னு முட்டாத்தனமா பேசக்கூடாது. (நான் என்னைய சொன்னேன்....) இப்படி மனசுல பட்டத கொஞ்சம் நீளமா எழுதுனா எப்படி இருக்கும். தமிழினத் துரோகி னு எவனாவது சண்டைக்கு வருவானா....(பொழுது போகும்ல.....) பல விமர்சனங்கள் வரும். வரட்டும் கமெண்ட் வரும். வரட்டும் அவனுக அப்படி பேசிக்கிட்டு இருக்குறப்ப நான் பேஸ்புக்க மூடிட்டு வேலைக்குப் போயிருப்பேன். விசயத்துக்கு வருவோம். ஹிந்திய படிக்கக்கூடாது னு ஒரு புத்திசாலி கூட்டம் மறுபடியும் எந்திருச்சுருக்கு. அடப் பதர்களா...இன்னுமாடா....னு என் மனச்சாட்சி கேக்குது. என் மனச்சாட்சிக்கிட்ட நானே பேசிக்கிட்டேன்.இவனுக ஹிந்திய வேணாம் னு சொல்லக் காரணம் என்ன  1. உண்மையிலேயே தமிழ் பற்றா இருக்குமோ....( பற்றுல வள்ளுவர ஓவர்டேக் பண்ணிருவானுகளோ)  2. 6ம் வகுப்பு படிக்கிறதுல இருந்து தமிழத் தவிர வேற எதுவும் தெரியாதோ.... 3. இங்கிலீஸ் பாடத்துல பெயில் ஆகிருப்பானுகளோ.... 4. இப்ப வேற வேலை இல்லாம சு...

மாமனார் வீடு

நான் என்னமோ தப்புத்தண்டா பண்ணி மாமியார் வீட்டுக்கு அதாங்க ஜெயிலுக்குப் போயிட்டு வந்துருக்கேனு நினைக்காதீங்க. இந்த பதிவு உண்மையிலேயே என் மனைவின் அப்பா அம்மா வீடு  என்பதையே குறிக்கும். எங்கள் குலதெய்வம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாச மலையிலுள்ளது. அங்கு வருடத்திற்கு ஒரு முறை வேன் பிடித்து நண்பர்களுடனும் உறவினர்களுடனும் போய் வருவது வழக்கம். ஆனால் அதே ஊரில் பெண் கிடைத்ததும் அடிக்கடி செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் வேனில் முடியுமா முடியாது. பஸ் அல்லது புகைவண்டி தான். நமக்கு இந்த ட்ரெயின் னாலே அலர்ஜிங்க...முதன்முறையாக நான் ட்ரெயின்ல போனது வேலைக்கு வந்து ஒரு முறை கம்பெனி மீட்டிங்க் என அழைத்தார்கள். ஒரு புண்ணியவான் சென்னைக்கு நான் அழைத்துச்செல்கிறேன் என்று சொல்லி முதன்முதலாக மதுரை டூ சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸில் ஏற்றிச் சென்றான் பாருங்க...லக்கேஜ் வைக்கிற பெர்த்தில் ஏறி உட்கார்ந்தோம்....4 பேரு....கால மடக்கி......ரமணா படத்துல கட்டிடம் இடிந்து சிம்ரனும் அவ மகளும் எரிந்து அப்படியே சாம்பலா சிலையா இருப்பாங்கள....அப்படி உக்காந்துருந்தேன்.....தாம்ப்ரம் சொன்னப்பின்னாடி தான் கால வ...

கொழுப்பு

மாரடைப்பு ஒரு மரணத்தை விழுங்கியிருக்கிறது. மாரடைப்பு என்பது என்ன... அதிலிருந்து தப்பிக்க வழி என்ன... இதெல்லாம் உங்களுக்கும் தெரிந்திருக்கும். தெரியாமலிருந்தாலும் இனிமேலாவது மருத்துவரைச் சந்தித்துத் தெரிந்துகொள்ளுங்கள். இருந்தாலு சில எளிய முறைகள் உள்ளன. உங்கள் உயரம் என்ன... உங்கள் எடை என்ன... உயரத்திற்கேற்ற எடை இருக்கிறதா.... உதாரணத்திற்கு உங்கள் உயரம் 165 செமீ. என வைத்துக்கொள்வோம். உங்கள் எடை 65கிலோவில்ருந்து 68 இருக்கலாம். இது தான் மிகச்சரியான ஆரோக்கியமான சமநிலை. இல்ல....அவ்வளவு மெலிஞ்சுட்டா..நல்லாருக்காது...பாக்குறவங்க நம்மள பாத்து " என்னப்பா இப்படி மெலிஞ்சுட்ட னு சொல்றது கஷ்டமாருக்கு" இப்படிலாம் பேசுனீங்கனா...நீங்க நெஞ்ச பிடிச்சு உட்காருறப்ப எவனும் கூட வரமாட்டான். (இது என் பஞ்ச்) இப்பொழுது 30 வயதுகாரர்களுக்குக் கூட சர்க்கரை வியாதி, மாரடைப்பு வருகிறது. முதலில் உடல்நிலையைப் பொறுத்தவரை நாம் எப்படி யிருக்கிறோம் என்பதை முதலில் நாம் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும். உடல் எடை உயரத்திற்கேற்றவாறில்லாம் கூடுதலாக இருந்தால் லிபிட் டெஸ்ட் எடுத்துப் பார்க்கவேண்டும். அதாவது கொழுப்பு. உடல்...

பேராசிரிய. கு. ஞானசம்பந்தன் உரையிலிருந்து எழுதப்பட்டது.

உறவுகளில் உயர்ந்த உறவு அம்மா! அம்மா என்ற வார்த்தைக்கு இணையான வார்த்தை இல்லை. அம்மா என்ற வார்த்தையில் உடல், உயிர் என எல்லாம் அடங்கும். எடுத்துக்காட்டாக " அம்மா"  என்ற வார்த்தையில்   'அ'  என்பது உயிர் எழுத்து 'ம்'   என்பது மெய் எழுத்து 'மா' என்பது  'ம்+ஆ'  உயிரும் மெய்யும் சேர்ந்த உயிர்மெய் எழுத்து. அம்மா என்பவள் நமக்கு உயிரைத் தருவதால் உயிரெழுத்து. நம் மெய்யாய் இருப்பதால் மெய் எழுத்து. இவ்வாறு உயிரும் உடம்புமாய் பாலூட்டி வளர்ப்பதால் உயிர்மெய் எழுத்து. உலகத்தை வெறுக்கும்  துறவிகள் கூட அம்மா மீது பாசம் கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக பட்டினத்தார் மற்றும் ஆதிசங்கரரையும் சொல்லலாம். ஆதிசங்கரர் ஆன்மீகப் பாதையில் ஒரு துறவியாக எங்கெங்குச் சென்றாலும், அம்மா மரணமடைந்ததும் தான் பிறந்த ஊரான 'காலடி' க்கு வந்தார். அதே போல் பட்டினத்தாரும் அவருடைய தாய் இறந்ததைக் கேள்விபட்டதும், தன் சொந்த ஊருக்கு விரைகிறார். அங்கு அவருடைய அம்மாவை விறகுகளை அடுக்கி எரிக்கச் செய்கிறார்கள். ஆனால் பட்டினத்தாரோ - 'என் அம்மாவின் உடம்பு மிகவும் ...
கழுத்துக்குக் கீழே வெள்ளைப் பூத்த காகம்.... புறாவைப் படைக்கப்போகும் கடைசித் தருணத்தில் பிரம்மன் செய்த சூத்திரத் தவறு அந்த காகம்.... நானும் அதுவும் பேசிக்கொள்ள ஒரு குவளைத் தண்ணீர் அலைவரிசை..... இன்றைக்கு மட்டும் இன்னும் பறக்கப்பழக்கப்படாத தன் வாரிசுடன் வந்தமர்ந்தது.... நீரிட்டக் கைகளுக்குப் பிரிவுபச்சாரமாய் கரைந்தன இரண்டும்..... நாளை நிறைந்திருக்கும் என் குவளை வெறுமையே......