இடுகைகள்

ஹேப்பி தீவாளி.....

தீபாவளினு ஒண்ணு வந்தாலே எனக்குப் பல ஃப்ளாஷ்பேக் போயிருது. சின்னப்பிள்ளைல தீபாவளினா புது ட்ரஸ், வெடி , ஸ்வீட். கீழ் வீட்டு ரஞ்சிதம் அத்தை சுட்டுத் தர்ற அப்பம். இதான் தீபாவளி. அப்ப மதுரைல மேலப்பொன்னகரம் எட்டாவது தெருல இருந்தோம். அங்க இருந்து க்ராஸ் ரோட்டுப்பக்கம் எங்கேயோ நடந்து ஒரு கல்லு சந்துக்குள்ள குடும்பத்தோட போவோம். அங்க தான் இருக்கும் வெங்கட் ராமன் கடை. அந்தக் கடை பேரு வெங்கட் ராமனா இல்ல ஓனர் பேரு வெங்கட் ராமனா னு தெரியாது. அது ஒரு பத்துக்கு பத்து இருக்குற ஒரு சின்ன ரூம் கடை. கீழ தரைல பாய் விரிச்சிருப்பானுக. கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் வச்சுப் பார்த்தா அந்தக் கிழிஞச பாய்லாம் வருஷா வருஷம் நாங்க எடுக்குற துணில நல்ல பாய விரிச்சுட்டானுக. துணியா எடுத்து வெளிய தைக்க கொடுப்போம். சட்டை டவுசர் தான்.  எனக்குத் தெரிஞ்சு  அஞ்சாவது படிக்குறப்ப கூட படிச்ச பாலசுப்பிரமணியன் என்றவன் வெங்கட் ராமன் கடைலயா எடுக்குற...பாத்து டவுசர் கிழிஞிசுருமேடா.....கால தூக்கிறாத னான். முடிஞ்சது கதை. சைக்கிள்ல டக் அடிச்சு உக்காந்ததுமே டக்குனு குனிஞ்சு பாத்துக்குவேன். அந்த தீபாவளிக்கு வெங்கட் ராம...

செஞ்சுரியன்

அவர் பேரு செஞ்சுரியன். நான் நடக்குற ஏரியாலத்தான் நடக்குறாரு. வயது ஒரு நாற்பத்தைந்துக்கு மேல இருக்கும். கொஞ்சம் குட்டை. கொஞ்சம் பருமன். கொஞ்சம் நரை. நிறைய கஞ்சம். ஏதாவது மீட்டிங்க்னா வந்து பேசுறவன் யாருனு பாக்ககூட மாட்டாரு. கிளப்புல ஏதாவது வேலைனா வந்து கலந்துக்கவும் மாட்டாரு. மீட்டிங்க் முடிஞ்சு சாப்பாடுனா வந்து நிப்பாப்புல... பஃபே சிஸ்டத்துல ஒருத்தன் எத்தனை பந்திக்கு சாப்பாடுறானு கண்டுபிடிக்க முடியாதுன்ற சட்டத்து ஓட்டைய செஞ்சுரியன் நல்லா பயன்படுத்திக்குவாரு. ஆமா நான் ஏன் செஞ்சுரியனு பேர் வச்சிருக்கேன்னு தெரியுமா. அதை கடைசியா சொல்றேன். இப்ப சொல்ற கதைய எடிட்டிங்க் மனசுல பண்ணி வேகம் வேகமா காட்சிகளை நகர்த்திப் பாக்கனும். ஃப்ளாஷ்பேக் ஒன்று. (ஆறு மாதத்துக்கு முன்னால்) நானும் இன்னொரு நண்பரும் நடக்குறோம். செஞ்சுரியன் வந்தாப்புடி. எவ்வளவு நடந்தாலும் பிரச்சினை போகமாட்டிங்குதே... என்ன சார் உங்க பிரச்சினை. ..இது நாங்க. மூலம் மலச்சிக்கல், செரிமானப் பிரச்சினை...இப்படி செஞ்சுரியன் அடுக்குனாரு. நல்லா நடங்க சார் ..இது என் நண்பர். மூச்சு வாங்குதே...இது செஞ்சுரியன்.. யோகா பண்ண...

மதுரை புத்தக மழை விழா

மதுரையில் நேற்றோடு புத்தகக் கண்காட்சி நடைபெற்று முடிவடைந்துள்ளது. அது பற்றி எழுத வேண்டியது ஆசை. அந்த புத்தகக் கண்காட்சியில் நான் என்னென்ன புத்தக்ங்கள் வாங்கினேன் என்று ஒரு பட்டியல் போடப்போகிறேன் என நினைக்காதீர்கள். இது அது அல்ல. கொஞ்ச நாள் முன்னதாக எழுத்தாளர் ஈரோடு கதிர் அவர்கள் ஈரோட்டில் நடந்த புத்தகத் திருவிழாவை ஒட்டி தினமும் நிலைத் தகவலாய் அந்த புத்தகத்திருவிழா பற்றி பதிவு செயதார். அப்பொழுதே எனக்கு தோன்றிய விசயம் நாமும் ஏன் மதுரையில் புத்தகத் திருவிழா நடக்கும்பொழுது இப்படி எழுதக் கூடாது என யோசித்து எழுத்தாளர் ஈரோடு கதிர் அவர்களிடம் வாட்சப்பிலும் பின்னூட்டத்திலும் காட்டப்படாத சூடத்தின் மேல் சூளுரைத்தேன். நானும் எழுதப் போகிறேன் என்று. அவரும் எழுதித் தொலையும் என்ற மைண்ட் வாய்ஸை மொழிபெயர்த்து எழுதுங்க பழனி)))) என்று ஸ்மைலியோடு சொன்னார். ஆனால் அவர் எழுதிய தொணி நமக்கு சரிபட்டுவராது என்பதும் நமக்கு வருவதை எழுத முற்பட்டால் scary movie ரேஞ்ச்க்குத்தான் மாறும் என்பதையும் காட்டப்படாத சூடத்தின் மேல் சூளுரைத்தேன். அதற்கான புத்தகக் கண்காட்சி செப்டம்பர் 1ம் தேதி ஆரம்பமானது. அதுவரை அஸ்ஸாம் ...

மதியப் பொழுதும் மழையும்

சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு  மல்லிகைச் சாரத்தைக்  காண்பித்தவளை ஒருமுறை பார்த்துவிட்டு இன்னொருபக்கம்  உன்னையும் பார்க்கிறேன்... சிரித்துக் காண்பித்த  உன் மதியப் பொழுது... நெடுஞ்சாலையின் ஓரத்தைக்  கிழித்துச் செல்லும் தொடர்வண்டியைப் பார்த்து கை நீட்டுகிறாய்.. உன் விரல் நுனியிலிருந்து மழலையின் பேரானந்தமாய் தொடர்வண்டி புகைகிறது... அரளிப்பூக்கள் பூத்துக்கொண்ட அந்தப் பாதையெல்லாம் நீயும் நானும்  முளைத்துக்கொண்டோம் ஒரு 'நாமாக' கைகள் கோர்த்துக்கொண்ட அந்த மதியத்தின் மத்திம பொழுதில் ஒரு மழையும்  நனைந்தது நம்மை நனைத்து.... இப்படித்தான்  அந்த நாளின்  நாட்குறிப்பேட்டு பக்கம் நனைந்திருந்தது ப்ரியத்தின் ஈர எழுத்துகளாய்.... பிறிதொரு நாளின்  தனிப் பயணத்தில் மல்லிகைச் சாரங்கள் நெறிக்கின்றன நீயற்ற தருணத்தின் உன் வாசங்களை... இருப்புப் பாதையில் நீ காட்டிய உன் விரலின் நுனி இன்னும் நிலை குத்தி நிற்கிறது உன்னில்லாமையின் இருப்பிற்குள்... பூக்களைச் சுமக்கு...

ப்ரிய சகி.....

ட்ரிங்..ட்ரிங்.... ஹலோ..சொல்லு.. என்னடா வேகமா பேசுற.. என்ன சொல்லு. எங்க இருக்க... வேலைக்குக் கிளம்பிட்டு இருக்கேன்.என்னனு சொல்லு எங்க இருக்கனு சொல்லு... ஏ..சொல்லு..லேட் ஆச்சு... இவ்ளோ வேகமாலாம் என்ட்ட பேசவேணாம். வேலைய முடிச்சிட்டு கூப்பிடுடா.. டக்குனு கட் பண்ணிட்டா செல்வி. செல்வி எப்போதும் இப்படித்தான். சில அல்ல பல சமயங்களில் ப்ரவீன் என்ன செய்வது என்பது அவனுக்குத் தெரியாத போது அவளது பார்வையில் அதை எடுத்துச் சொல்வாள். எடுத்துச் சொல்வது என்ன , தாறுமாறாக அதை ஆராய்ந்து கிளித்துத் தொங்க விடுவாள். அப்பொழுது தான் ப்ரவீனுக்குப் புரியும் இப்பொழுது கூட அவளுக்கு அலுவலகம் செல்லும் வழியில் சிக்னலில் நின்ற போது  ஒரு துணிக்கடையில் வெளியே பொம்மைக்கு போட்டு வைத்திருந்த சட்டையில் தன் ப்ரியமானவனை ஒரு கனம் நினைத்துப் பார்த்து, அந்த சட்டை அவனுக்குப் பொறுத்தமாக இருக்கும் என கற்பனை பண்ண சட்டென சிக்னலில் யூ டர்ன் அடித்து அந்தக் கடையில் அந்த பொம்மையின் சட்டை உறுவச்சொல்லி வாங்கி விட்டாள். அதை அவனுக்குக் கொடுக்க வேண்டும். ப்ரியத்தின் சுனாமிதான் செல்வி. எக்கனமும் அவனை நின...

கரை குறிப்பு 3

காலின் அடியில் நகரும் நீர்நிலமாய் நழுவுகிறது தூக்கிச் சுமந்த ப்ரியத்தின்  சொல்லொன்று... ##கண்ணீரலையின் கரை குறிப்பு

கண்ணீரலையின் கரை குறிப்பு 2

உலர்ந்த பின் உதிரும் விரலிடைத் துகளாய் கனக்கிறது ப்ரிய அலையொன்றின் மௌன ஈரம்... ##கண்ணீரலையின் கரை குறிப்பு