சைரன் 8

நேற்றையப் பதிவில் நண்பர் முருகேசன் குழந்தைகளுக்கான தடுப்பூசி வகைகள் அது போட வேண்டிய காலம் பற்றி எழுதச் சொல்லியிருந்தார்கள். போன பதிவில் அதைப் பற்றி எழுத நினைத்தாலும் அது நீண்டு தனிப் பதிவாக வரும் என்றும் அதை விட்டு விட்டேன். இருந்தாலும் நண்பரின் ஆசைக் கிணங்க சில கருத்துகள்.

உங்களுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என உங்கள் கையில் குழந்தையைத் தந்த உடனேயே இன்னொரு அட்டவணையையும் தருவார்கள். அது தடுப்பூசி அட்டவணை. சில மகப்பேறு மருத்துவமனைகளில் அந்த அட்டவணையைத் தருவதுடன் அங்கேயே நீங்கள் ஊசி போட்டுக்கொள்ளலாம் எனச் சொல்வார்கள். சில மகப்பேறு மருத்துவர்கள் குழந்தை மருத்துவரிடம் காண்பித்து போட்டுக்கொள்ளூங்கள் என்று சொல்வார்கள்.

தடுப்பூசிகளைப் பொறுத்தவரை நீங்கள் கண்டிப்பாக போட வேண்டும். அரசாங்க சார்பில் ஒரு அட்டவணையையும், பிரைவேட் குழந்தை மருத்துவர்கள் சார்பில் ஒரு அட்டவணையையும் வைத்திருக்கிறார்கள். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் கண்டிப்பாகப் போட வேண்டிய ஊசிகள் அரசு சார்பாகக் கொடுக்கப்பட்டிருக்கும் நிரலில் இருக்கும். தனியார் குழந்தை மருத்துவ மையம் சார்பில் தந்திருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் நிரலில் அரசு சொன்ன ஊசிகளும் , கூடுதலாக சில நோய்களுக்கான ஊசிகளும் சேர்க்கப்பட்டிருக்கும். 
இப்பொழுது குழப்பம் எதை நாம் தொடர்வது என்பது தான்.
அரசு சார்பாக வைத்திருக்கும் நிரல் கண்டிப்பாக போட வேண்டியது. தனியார் மையம் அறிவுறுத்தும் தடுப்பூசிகள் உதாரணத்திற்காக இன்ப்ளூயன்ஸா டைபாய்டு இது போன்றவை அரசு நிரலில் இருக்காது. நீங்கள் போட வேண்டும் என்றால் போட்டுக்கொள்ளலாம். தேவையில்லை என்றால் தேவையில்லை. 
எந்த நிரலை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள். உங்கள் நண்பரின் குழந்தைக்கு இந்த காலத்தில் இந்த விலையில் இந்த ஊசி போட்டிருக்கிறார்கள். நம் குழந்தைக்கு போட்டிருக்கிறோமா என எல்லாம் குழப்பாதீர்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். அதை மருத்துவர்கள் செய்வார்கள். அரசு மருத்துவமனை அடிப்படை சுகாதார மையங்களில் அரசு நிரல் தடுப்பூசிகள் இலவசம் தான். அதை நாம் தேர்ந்தெடுத்து போட்டுக்கொள்ளலாம். மருத்துவரிடம் காண்பித்து அந்த அடடவணையைக் கையில் வைத்துக்கொள்ளூங்கள். தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வருமா? ஆமாம். சில தடுப்பூசிகளுக்குக் காய்ச்சல் வந்தால் தான் நல்லது. 

பொதுவாகக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது காலையிலிருந்து மதியத்திற்குள் போடுவது நல்லது. நீங்கள் உங்கள் வசதிக்காக வேலை முடித்து டிவி பார்த்து, விருந்தாளிகளை உபசரித்து பிறகு மாலை 4 மணிக்கு ஊசி போட்டுக்கொண்டீர்களென்றால் கொஞ்சம் சிரமம். ஏன் என்றால் சில தடுப்பூசிகளுக்குக் குழந்தைகளுக்குக் காய்ச்சல் வந்தால் இரவில் உங்களுக்கும் கஷ்டம். குழந்தையும் தூங்காமல் அனத்தும். ஆதலால் மதியத்திற்குள் தடுப்பூசி போடுவது  சிறந்தது. 


சிலநேரம் தாய்ப்பால அருந்தும் குழந்தைகளுக்குப் பிரச்சினைகள் அம்மா வழியாக வரலாம்.
அம்மாவிற்குக் காய்ச்சல் வந்தால் குழந்தைக்கும் வரலாம்.
அம்மாவிற்குச் சளி பிடித்தால் குழந்தைக்கும் பிடிக்கலாம்.
சில பெண்கள் கர்ப்பமாயிருக்கும் போது கடைபிடித்த உணவு கட்டுப்பாடுகளை பிரசவத்திற்குப் பின் கடைபிடிபுபது இல்லை.
பால் கொடுக்கும் தாய்மார்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் மருந்துகள் எடுக்கக்கூடாது
உதாரணமாக ஒரு பிரசவம் முடிந்து பால் கொடுக்கும் பெண்ணிற்குச் சளி காய்ச்சல். இருமல். என்றோ சாப்பிட்ட இருமல் மருந்தை நல்லா கேட்குமென நாமாகச் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் அவர் சாப்பிடுவது இரத்தத்தில் கலந்து பாலாக குழந்தைக்குச் செல்கிறது.
ஒரு முறை ஒரு கிராமத்தில் வேலை நிமித்தமாக ஒரு மருந்துக்கடையில் நின்றிருந்தேன். ஒரு வாடிக்கையாளர் வருகிறார். கிராமம் என்பதால் அனைவரும் அந்தக் கடைக்காரருக்குப் பரிச்சயம்.
வந்தவர் ஒரு இருமல் மருந்தைக் கேட்கிறார்
கடைக்காரர் கொடுக்கிறார்.
பணப் பரிமாற்றம் நடந்தது.
வாடிக்கையாளர் நகர ஆரம்பித்தபோது கடைக்காரர் கேட்டார்.
யாருக்கு
என் மகளுக்கு
பிள்ள பெத்தவங்களுக்காக
ஆமா
அதச் சொல்ல வேணாமா னு மாத்தி கொடுத்தார்.
சில இருமல் மருந்தில் c.p.m என்ற மருந்து இருக்கும் கொடுக்கக்கூடாது.
பிரசவத்திற்குப் பின் மட்டுமல்ல...
கர்ப்ப காலத்திலும்.

கர்ப்பகாலத்துக் கதை இதை விட மோசம்.
கர்ப்பகாலத்தை ட்ரைமெஸ்டர் என பிரிப்பார்கள். முதல் மூன்று மாதம் 1st ட்ரைமெஸ்டர் முக்கியமான ஒன்று. திருமணம் முடிந்து கர்ப்பமாதல் தள்ளிப்போய் பிறகு சிகிச்சையில் இருந்து கர்ப்பமானப் பெண்கள் அந்த காலத்தில் மிக மிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
அப்பொழுது சிலர் தாறுமாறானப்  பயணம் மேற்கொள்கிறார்கள். பைக் ஆட்டோ என பயணித்தல் ஆபத்து.
சில கணவன்மார்களும் திருமணமான மூன்று மாதங்களுக்குப் பின்னும் பைக்கில் செல்லுகையில் வேகமாக அல்லது பள்ளம் மேடு பார்க்காமல் செல்வார்கள். பலவீனமானப் பெண்களின் கர்ப்பத்திற்கு அது நல்லதல்ல.
இது சாதாரண விசயம். இதை எழுதுவது மிகச் சாதாரணம் எனச் சிலர நினைக்கலாம். இந்த விசயம்லாம் எல்லோருக்கும் தெரியும் எனக் கூட நினைக்கலாம்.

நண்பர்களே நன்றாகக் கவனியுங்கள். உங்கள் ஊரில் குழந்தையின்மைக்கான மருத்துவமனைகள் அதிகம் தோன்றியிருக்கும். இந்தப் பிரச்சினை இப்பொழுது அதிகம்.

சில கிராமங்களில் கர்ப்பவதிகளை வெளியில் அழைத்துச் சென்றாலும் அவர்கள் இருக்கும் வண்டியிலும் வேப்ப இலை சிலவற்றைக் கொய்து கட்டியிருப்பார்கள். கர்ப்பவதிகள் வெளியே வருகையில் தலையில் வைத்திருப்பார்கள்.
காரணம் என்னவாக இருப்பதில் நான் கண்டது பின் வருபவன் எதிரே வருபவன் கவனித்து வர த் தான்...

உங்களுக்குப் பிறக்கும் குழந்தையை அறிவாளியாக சுறுசுறுப்பாகப் பிரசவிக்க கர்ப்ப காலத்தில் சுந்தரகாண்டம் படிப்பதோடு வேறு என்ன செய்யலாம் நண்பர்களே....கருத்துகளைப் பகிருங்கள்.


சைரன் 9 ல் நீங்கள் சொன்னதையும் எழுதுகிறேன்

கருத்துகள்

  1. சைரன் 8 - குழந்தைகளுக்கான தடுப்பூசி வகைகள் - சில கணவன்மார்களும் திருமணமான மூன்று மாதங்களுக்குப் பின்னும் பைக்கில் செல்லுகையில் வேகமாக அல்லது பள்ளம் மேடு பார்க்காமல் செல்வார்கள். பலவீனமானப் பெண்களின் கர்ப்பத்திற்கு அது நல்லதல்ல.- சில கிராமங்களில் கர்ப்பவதிகளை வெளியில் அழைத்துச் சென்றாலும் அவர்கள் இருக்கும் வண்டியிலும் வேப்ப இலை சிலவற்றைக் கொய்து கட்டியிருப்பார்கள். கர்ப்பவதிகள் வெளியே வருகையில் தலையில் வைத்திருப்பார்கள்.
    காரணம் என்னவாக இருப்பதில் நான் கண்டது பின் வருபவன் எதிரே வருபவன் கவனித்து வர த் தான்...- மிகவும் பயனுள்ள பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் - I am proud of You Palani Kumar

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....