நிகழ்தகவு

உன் திசைகளில்
எப்பொழுதுமே
இருள்வதேயில்லை..

நீயற்றத் தெருக்களில்
சுவாரஸ்யங்கள்
எப்பொழுதுமே
நிகழ்வதில்லை..

நீயெழுதாதக்
கவிதைகளில்
எப்பொழுதுமே
யாரும் குடிகொண்டதில்லை..

உன் பெயரில்
நீயற்று யார்
திரும்பினாலும்
எப்பொழுதுமே
பெயர்ச்சொல்
வினைச்சொல்லாவதில்லை..

என்றாவது
நிகழ்வது போல்
எப்பொழுதுமே
நிகழாத
நிகழ்தகவு என
முடிகிறது
இந்தக் கவிதை

03/03/20

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....