ஆமென்

நீங்கள் தானே
பாவமன்னிப்பு
கோரினீர்....
நீங்கள் தானே
பெருமெழுகொன்றைப்
பேரம்பேசி வாங்கியபின்
எரிந்தொழுகும்வரை
நெடிய வேண்டுதலை
வேண்டினீர்...
நீங்கள் தானே
யாசகக் கைககளில்
அவலப் பார்வைகளை
நிரப்பினீர்...
நீங்கள் தானே
ஏதுமற்றவர்களுக்கான
அன்னதானக் கூடங்களில்
பங்கிட்டீர்....
மன்னிக்கவும்.
சமாதானத்துடனே போ
உன் வேண்டுதல்
ஏற்கப்பட்டதென்ற
வசனத்தைத் தவிர்த்து
தேவ செய்தியைத்
துதியுங்கள்.
ஆமென்.

27/12/19

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....