உங்கள் காட்டில் மழை தானே

உங்கள் காட்டில்
மழை பெய்து
கொண்டுதானே
இருக்கிறது...

உங்களது உத்தரவின்
பேரில் தானே
தடபுடலாய் தடைகள்
அரங்கேறுகின்றன...

காலணியின் அடியில்
நசுக்கப்பட்டப்
பூக்களை மறுமுறை
பார்ப்பதற்கு
ஒரு தைரியம்
இருக்கிறது தானே...

சாமான்யன்
வெளிவரும்போது
அணிந்திருந்த
கேள்விக்கவசங்கள்
அவிழ்க்கப்பட்டு
யாசகக் கவசங்கள்
வழங்கப்படுதல்
ஒருவகையில்
நல்லது தான்...
ஏனெனில்
முதுகெலும்பற்றவைகள்
கவலையற்றவை...
ஊர்ந்தாவது
காணாமல்போக
வழியுண்டு...

நீட்டப்பட்ட
ஒரு விரலை
மட்டுந்தான்
தேர்ந்தெடுக்கும்
ஆகச் சிறந்தக்
கருணை
தரப்பட்டிருக்கிறது

இப்படியானக்
குறுஞ்செய்தியை
நால்வருக்கு
அனுப்பி
பசியை
மறைத்துக்கொள்ள
முதுகெலும்பு
தேவைதானே...

இப்பொழுதும் கூட
பல்லக்கைத் தூக்க
ஒரு கூட்டம்
வந்து நிற்கிறது..
பிறகென்ன
உங்கள் காட்டில்
மழை பெய்து
கொண்டுதானே
இருக்கிறது....

14/4/20

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....