உரையாடல்கள் பாதியிலேயே நிற்கின்றன

உரையாடல்கள்
பாதியிலேயே
நின்றபடிக்கு
இருக்கின்றன..
நேர்செய்யப்படாத
கூந்தல் கற்றையுடனே
சுயமி படம்
அனுப்பப்படுகிறது..
சுயமிக்குள்
ஊடுருவி விழுந்து
அப்போதைக்கு
அங்கே விரவியிருக்கும்
ஒரு நறுமணத்தின்
ஞாபகக் கிளர்வுகளைப்
பெற்றபடி
புனைவு ஒன்று
அறுபடுகிறது....
கதவைத் தட்டி
வெளியிலிருந்து
உள்ளே வர
எத்தனிப்பவர்களின்
நிகழ்தகவுகள்
சூன்யமாக
இருக்கின்றன....
பொத்தம்பொதுவாய்
பரிமாறப்பட்ட
ஒரு குவளையில்
சரிபாதித் தண்ணீரைப்
பருகியபடி
உனக்குமொரு அளவை
மிச்சம்வைத்தத்
தருணம்
இது போன்ற
ஒரு நல்பகல் தான்.....
நீயில்லை என்றபோதிலும்
நிகழ்வுகளிலிருத்தல்
ஒரு முரண்...

மற்றபடி
உரையாடல்கள்
பாதியிலேயே
நின்றபடிக்கு
இருக்கின்றன....

பழனிக்குமார்
03/04/20

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....