மனப்பிறழ்வுக்காரர்கள்

மனப்பிறழ்வுக்காரர்களிடம்
ஓர் அதிசயம்
இருக்கிறது.
எப்பொழுதும்
தன் மேல்
ப்ரியமாய் இருந்தவர்கள்
தங்களின் ப்ரியங்களை
நிறுத்திய நாளோடு
நின்று போயிருக்கிறார்கள்.
தாள முடியாத
ஒற்றை நிகழ்விலோ
ஒற்றை வார்த்தையிலோ
வீழ்ந்தவர்கள்
தான்
காணாமல் போவதாகத்
தன்னை
அணிந்துகொள்கிறார்கள்...
மனப்பிறழ்வுக்காரர்களிடம்
ஒரு லாவகம்
இருக்கிறது.
யாருக்கோ சொல்ல
நினைத்த
வார்த்தைகளோடு
வேற்றுலகத்தில்
பிரசவித்துக்கொள்கிறார்கள்...
அவர்களால்
தன் கடந்தகால
துரோகங்களுக்காகச்
சத்தமாக
அழ முடிகிறது...
ப்ரியக்காரர்களின்
புறக்கணிப்பை
அசைபோட்டு
அவர்களால்
தூங்க முடிகிறது...
மனப்பிறழ்வுக்காரர்களிடம்
யாசிக்க
ஒன்று
தேவையாயிருக்கிறது...
காரணமற்று
தன்னைத்
தன்னிலிருந்து
விடுவித்துக் கொள்ளும்
தானற்ற நிலை அது..
இன்னொரு
அன்பும் வலியும்
வந்துவிடாத
பிறழ்வு வரமது...

23/12/17

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....